மன்னார்
மன்னார் (Mannar) இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமும், மன்னார் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஆகியன அமைந்துள்ளன.[1][2][3] சுற்றுலாப் பிரதேசங்கள்மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்குச் சற்றே அப்பால் பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது. இதைவிடத் தேவாரத்தில் இடம்பெற்ற திருக்கேதீஸ்வரம் பரணிடப்பட்டது 2013-05-12 at the வந்தவழி இயந்திரம் யாத்திரீகர்கள் வந்துபோகின்றனர். அங்கே யாத்திரீகர் மடங்கள் பல உள்ளன. அதே போல் மன்னாரில் உள்ள மடு ஆலயம் மிகப் பிரபலமான திருத்தலம் ஆகும். இங்கு இலங்கையில் உள்ள மக்கள் வருகை தந்து வழிபடுகின்றார்கள். மேலும் தலைமன்னார் கலங்கரை விளக்கம் புதியதொரு மாற்றம் கண்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. அத்துடன் குஞ்சுக்குளம் தொங்கு பாலமும் மக்கள் தமது பொழுதைக் கழிக்கச் செல்லும் இடமாகும். போக்குவரத்துபுகையிரத சேவைதலை மன்னாரில் இருந்து மன்னார் மற்றும் மதவாச்சி வழியாக தொடருந்துப் போக்குவரத்து கொழும்பு வரை காணப்படுகின்றது போர்க்காலத்தில் சேதமுற்றுக் காணப்பட்ட இப் பாதையினை இலங்கை-இந்திய நட்புறவின் அடையாளமாக இந்திய அரசின் நிதியில் இருந்து மீள புனரமைக்கப்பட்டுள்ளது பேருந்துச் சேவைகள்கொழும்பிற்கு மன்னாரிலிருந்தும் வவுனியா ஊடாகவோ அல்லது நேரடியாக மதவாச்சியூடாகவோ பயணிக்கலாம்.
மன்னாரிலுள்ள பாடசாலைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia