மரகத வீணை (தொலைக்காட்சித் தொடர்)
மரகத வீணை ஜனவரி 27, 2014 ஆம் திகதி முதல், திங்கள் முதல் சனி வரை, பகல் 11 : 30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். மரகத வீணையில் விரல் பதித்து அனைத்து நரம்புகளையும் ஒற்றை விரலால் மீட்டி ராகத்தை கண்களில் கண்ணீரோடு தரும் தொடர். மெட்டி ஒலி எஸ் சித்திக்கின் சினிடைம்ஸ் நிறுவனம் இத்தொடரைத் தயாரிக்கிறது. இந்தத் தொடருக்கு எல். முத்துகுமாரசாமி மற்றும் கே. ஆர். ராஜகோபாலன் கதை-திரைக்கதை எழுதியுள்ளார்கள். இந்தத் தொடரை ப. செல்வம் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் கார்த்திகை பெண்கள், தேனிலவு மற்றும் காயத்ரி போன்ற தொடர்களில் நடிக்கின்ற நீமா/ சந்தோஷி கதாநாயகியாக நடித்துள்ளார், இவருடன் உதய், மனோகரன், குமரகுரு, கிருத்திகா போன்ற பல சின்னத்திரை நடிகர்கள் நடித்துள்ளார்கள. கதை சுருக்கம்காதலனின் குடும்பத்திற்காக எல்லாமாய் மாறிய ஒரு பெண்ணின் சரித்திரம். காதலனின் சகோதரிகளுக்கு தாயாக மாறிய ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை குறிக்கிறது. நடிகர்கள்
பாடல்இந்த தொடருக்கு யுகபாரதி பாடல் எழுதி உள்ளார். ஹரிஹரசுதன் பாடல் பாடியுள்ளார். இவற்றை பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia