மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 2017![]()
ஐக்கிய இராஜ்ஜியத்தின் மான்செஸ்டர் நகரில் இசைக்கச்சேரி நடந்த மான்செஸ்டர் அரீனா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 59 பேர் காயமடைந்தனர். தாக்குதல்22 மே, 2017 அன்று உள்ளூர் நேரப்படி 22:33 மணியளவில் 21,000 பார்வையாளர்களைக் கொண்ட இசைக்கச்சேரி முடிந்ததும் நடந்த இத்தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது.[2] பாதிக்கப்பட்டோர்இத்தாக்குதலில் பொதுமக்கள் 22 மற்றும் தாக்குதல்தாரி ஒருவர் உட்பட 23 பேர் மரணமடைந்தனர். பொதுமக்களில் குழந்தைகள் உட்பட 59 பேர் காயமடைந்தனர். தாக்குதல்தாரிஇத்தாக்குதலை நடத்தியவர் லிபிய வம்சாவளியைச் சார்ந்த சல்மான் அபிடி (Salman Abedi), 22 வயதுடைய இவர் ஐக்கிய இராஜ்ஜியத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். தாக்குதல்தாரி தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்ததின் மூலம் தனியாக இத்தாக்குதலை மேற்கொண்டார் என காவல்துறை தெரிவித்தது.[3] பின் நிகழ்வுகள்இக்குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகக் கருதுவதாக காவலர்கள் தெரிவித்தனர். 7 ஜீலை 2005 ம் ஆண்டிற்குப் பின்னர் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள் இத்தாக்குதலைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.[4][5][6] தாக்குதல் நடந்த இடத்தின் அருகிலுள்ள மான்செஸ்டர் விக்டோரியா தொடருந்து நிலையம் அதன் சேவைகளை ரத்து செய்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் உடனடியாக மூடப்பட்டது.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia