மாராங் மக்களவைத் தொகுதி
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Marang; ஆங்கிலம்: Marang Federal Constituency; சீனம்: 马江国会议席) என்பது மலேசியா, திராங்கானு, மாராங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P037) ஆகும்.[8] மாராங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து மாராங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] மாராங் மாவட்டம்கோலா திராங்கானு மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் வடக்கில் கோலா நெருசு மாவட்டம்; கோலா திராங்கானு மாவட்டம்; தெற்கில் டுங்குன் மாவட்டம்; மேற்கில் உலு திராங்கானு மாவட்டம் மற்றும் கிழக்கில் தென்சீனக் கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் மாராங் ஆகும். வரலாறுமாராங்கின் நிர்வாக வரலாறு, திராங்கானுவின் ஒன்பதாவது சுல்தான் பாகிண்டா ஓமார் (Baginda Omar) (1839-1876) ஆட்சியில், மாராங் நதிக்கரை மாவட்டங்களை (Riverine Districts) ஆளும் பிரபுக்களின் (Governing Nobles) நியமனத்துடன் தொடங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், சுல்தானக உயர் அதிகாரியாக இருந்தவர் சுல்தானின் சார்பாக வரி வசூல் செய்வது; மற்றும் வருவாயை நிர்வகிக்கும் பொறுப்புகளை வகிக்கத் தொடங்கினார்.[10] மாராங் மக்களவைத் தொகுதி
மாராங் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia