மார்ட்டின் லூதர் கிங் நாள்
மார்ட்டின் லூதர் கிங் நாள் (Martin Luther King, Jr. Day) அருள்திரு முனைவர் மார்ட்டின் லூதர் கிங் இளையவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய அமெரிக்காவில் கூட்டமைப்பு அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கிங்கின் பிறந்த நாளான சனவரி 15ஐ ஒட்டி வருகின்ற சனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. கிங் அமெரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநில சட்டங்களில் இனப்பாகுபாடுகளை வெற்றிகரமாக எதிர்த்த ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் அகிம்சை வழியை பரப்பியவராவார். 1968ஆம் ஆண்டில் அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது நினைவாக ஓர் கூட்டமைப்பு விடுமுறை கோரும் இயக்கம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ரோனால்டு ரேகன் இந்த விடுமுறையைச் சட்டமாக்கினார்[1][2] . 1986ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இதனை ஐக்கிய அமெரிக்காவின் சில மாநில அரசுகள் இதே பெயரில் கடைபிடிக்க விரும்பாது மாற்றுப் பெயர்களில்[3] அல்லது பிற விடுமுறைகளுடன் இணைத்து கடைபிடித்தன. 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவி அனைத்து 50 மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாக இந்நாள் கடைபிடிக்கப்பட்டது. ![]() மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia