முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி43
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி43 (The PSLV-C43 ) என்பது முனைய துணைக்கோள் ஏவுகல திட்டத்தின் 45 ஆவது ஏவுதல் ஆகும். இந்த ஏவுகலத்தில் சூரியவிணக்கப் பாதையில் படம்பிடிக்கக் கூடிய முதன்மை தாங்குசுமை கொண்ட அதிநிறமாலைக் கூறாக்க படமாக்கல் செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.[1] ஆந்திரப் பிரதேசம்,ஸ்ரீஹரிக்கோட்டா, சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நவம்பர் 29, 2018 இல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் இந்த ஏவுகலம் விண்ணில் ஏவப்பட்டது.[2] நோக்கம்இந்த ஏவுகலத்துடன் அனுப்பப்படும் 31 செயற்கைக் கோள்களில் 1 செயற்கைக் கோள் இந்தியாவினுடையதும் மற்ற 30 செயற்கைக் கோள்கள் வெளிநாடுகளுடையதும் ஆகும். வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களில் ஆசுதிரேலியா, கனடா, கொலம்பியா, நெதர்லாந்து, இசுபெயின், பின்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் செயற்கைக் கோள்கள் தலா ஒன்றும், அமெரிக்காவின் 23 செயற்கைக் கோள்களும் அடங்கும்.[3] இந்திய செயற்கைக் கோளின் சிறப்பம்சங்கள்இந்திய செயற்கைக் கோளானது, இந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர்நிலைகள், மண்ளம் மற்றும் இராணுவ உளவுப்பணிக்காக அதிநிறமாலைப்பிரிதிறன் கொண்ட பிம்பமாக்குதல் திறனைக் கொண்ட புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகும். சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia