முறையற்ற தலை அதிர்ச்சி
முறையற்ற தலை அதிர்ச்சி ( AHT ), பொதுவாக குழந்தை அதிர்ச்சி நோய்க்குறி ( SBS ) என அழைக்கப்படுகிறது, இது வேறு ஒரு நபரின் தவறான கையாளல்களால் குழந்தையின் தலையில் ஏற்படும் பாதிப்பு ஆகும். இந்த நோய்க்குறியின் அறிகுறிகள் நுட்பமான அறிகுறிகள் முதல் வெளிப்படையான அறிகுறிகள் வரை இருக்கலாம்.[1] வாந்தி அல்லது ஒரு குழந்தை சீர்மையின்றி இருத்தல் ஆகியவை மூலம் இதன் அறிகுறிகளை அறியலாம். பெரும்பாலும் முறையற்ற தலை அதிர்ச்சியின் அறிகுறிகள் எதுவும் கானப்படுவதில்லை. வலிப்புத்தாக்கங்கள், பார்வைக் குறைபாடு, பெருமூளை வாதம் மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஆகியவை இந்த நோய்க்குறியின் சிக்கல்களில் அடங்கும்.[2] இது குழந்தையின் தலையில் ஏற்படும் ஓர் அப்பட்டமான அதிர்ச்சி அல்லது வீரியமான நடுக்கம். ஆகும். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதால் அந்தக் குழந்தையின் பராமரிப்பாளர் எரிச்சலடைவதன் விளைவாக இது நிகழ்கிறது.[3] அறிகுறிகள் குறிப்பிடப்படாததாக இருப்பதால் நோயறிதல் கடினமாக இருக்கும். இது நிகழ்ந்துள்ளதாகக் கவலை இருந்தால் தலையின் CT ஸ்கேன் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. விழித்திரை இரத்தப்போக்கு பொதுவானது என்றாலும், இது மற்ற நிலைகளிலும் ஏற்படலாம். முறையற்ற தலை அதிர்ச்சி என்பது ஒரு வகை குழந்தைகள் மீதான வன்கொடுமை ஆகும். . புதிய பெற்றோருக்குஇது தொடர்பான கல்வி அறிவினை வழங்குதல் இந்த நிலைமையின் வீதங்களைக் குறைப்பதில் பயனளிக்கும் என்று தோன்றுகிறது. சில நேரங்களில் பெருமூளையில் சண்ட் எனப்படும் ஓர் கிளை இணைப்பைப் பொருத்துதல் போன்ற அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. முறையற்ற தலை அதிர்ச்சி நோய்க்குறி ஆண்டுக்கு 10,000 குழந்தைகளுக்கு 3 முதல் 4 வரை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்கு குறைவானவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது.[3] இறப்பு ஆபத்து சுமார் 25% ஆகும். நோயறிதல் பெற்றோருக்கு சட்டரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். அறிகுறிகள்விழித்திரை இரத்தக்கசிவு, நீண்ட எலும்புகளில் பல எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் இரத்தக் கட்டிகள் உருவாதல் ஆகியவை இதனுடன் தொடர்புடைய இயல்பான பாதிப்புகள் ஆகும்.[4] குழந்தைகள் மீதான வன்கொடுமையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அறிகுறிகளாக இந்த அறிகுறிகள் பல ஆண்டுகளாக உருவாகியுள்ளன. ஒரு இளம் குழந்தை விழித்திரை இரத்தப்போக்கு, எலும்பு முறிவுகள், மென்மையான திசு காயங்கள் அல்லது மூளையில் இரத்தக் கட்டிகள் உருவாதல் ஆகியவற்றைக்கொண்டிருக்கும் போது, குழந்தை அதிர்ச்சி நோய்க்குறியாக இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கடுமையாக சந்தேகிக்கிறார்கள், அவை தற்செயலான அதிர்ச்சியாகவோ அல்லது பிற மருத்துவ நிலைமைகளால் விளக்க முடியாததாகவோ இருக்கிறது.[5] விழித்திரை இரத்தக்கசிவு சுமார் 85% குழந்தை அதிர்ச்சி நோய்க்குறி நிகழ்வுகளில் ஏற்படுகிறது; விழித்திரை இரத்தப்போக்குகளின் வகை இந்த நிலையின் சிறப்பியல்பு ஆகும், இது நோயறிதலை நிறுவுவதில் அடையாளம் காணல்களைப் பயனுள்ளதாக மாற்றுகிறது.[6] குழந்தை அதிர்ச்சி நோய்க்குறியைத் தவிர விழித்திரை இரத்தப்போக்குகளுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும், வழக்கமாக கூடுதல் அடையாளம் காணல்கள் (கண்கள் அல்லது முறையானவை) உள்ளன, அவை மாற்று நோயறிதல்களைத் தெளிவாக்குகின்றன. [ மேற்கோள் தேவை ] முதுகெலும்புகள், நீண்ட எலும்புகள் மற்றும் விலா எலும்புகளின் எலும்பு முறிவுகளும் முறையற்ற தலை அதிர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.[7] 1972 ஆம் ஆண்டில் டாக்டர் ஜான் காபீ தனது அறிக்கையில் எலும்பின் இடைவளர் முனைகள் ( எலும்பு மற்றும் கார்டிகல் எலும்பை உள்ளடக்கிய பெரியோஸ்டியம் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள எலும்பின் சிறிய கூறுகள் கிழிந்து பிய்ந்திருத்தல்..) மற்றும் "ஒரு மூட்டுக்கு அருகிலுள்ள மற்றும் தொலைவிலும் உள்ள எலும்புகள் குறிப்பாக முழங்காலில் பாதிக்கப்படுகின்றன." என்று குறிப்பிடுகிறார்.[8] முறையற்ற தலை அதிர்ச்சி பாதித்த பின்னர் எரிச்சல், செழிக்கத் தவறுதல், உண்ணும் முறைகளில் மாற்றங்கள், சோம்பல், வாந்தி, வலிப்புத்தாக்கங்கள், வீக்கம் அல்லது இறுக்கமான உச்சிக்குழி (குழந்தையின் தலையில் மென்மையான புள்ளிகள்), தலையின் அளவு அதிகரித்தல், சுவாசம் மாறுதல், மற்றும் விரிந்த கண் பாவை ஆகியவற்றைக் காட்டலாம்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia