மேற்கு வங்காளத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள்மேற்கு வங்காளத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் (Anti-Hindi agitations of West Bengal) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகும். மேற்கு வங்கத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான இயக்கங்களானது முதன்மையாக சமூக ஊடகங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றின் மூலம் நடத்தப்பட்டது. தெருமுனைக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் துவக்கத்தில் கொல்கத்தா நகரம் அல்லது கொல்கத்தா பெருநகரப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தன. ஆனால் பின்னர் மேற்கு வங்கத்தின் பல்வேறு கோட்ட நகரங்கள் மற்றும் மாவட்ட நகரங்களுக்கு பரவியது. இந்த இயக்கங்கள் அனைத்தும் அம்ரா பங்காலி, பங்களா போக்கோ, ஜாதியோ பங்களா சம்மேளன் போன்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டன. [1] [2] [3] 2010களின் முடிவில் இருந்து, மேற்கு வங்காளத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், வங்கிகள், கொல்கத்தா மெட்ரோவின் பெயர்ப் பலகைகள் போன்றவற்றில் வங்க மொழி தவிர இந்தி மற்றும் ஆங்கில மொழிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் தெருமுனைக் கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தன. [1] 1980கள்1980 களில் வங்காள மொழியை முதன்மைப்படுத்த அம்ரா பங்காலி என்ற ஒரு அரசியல் கட்சித் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த கட்சியின் செயல்பாடுகள் பொதுவாக மேற்கு வங்கத்தின் வட பகுதியில் மட்டுமே இருந்தன. 2021 இல் பிற போராட்டங்கள்இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் 2021, மார்ச் 19 அன்று கல்வி நிறுவன ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடப்பட்டது, நிறுவனங்களில் 55% எழுத்துத் தொடர்புகள் இந்தியில் செய்யப்பட வேண்டும் என்று அது கூறியது. [4] பல்கலைக்கழகத்தின் இந்தித் திணிப்புக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கல்லூரி வளாகத்தில் 'இந்தித் திணிப்பு வேண்டாம்' என எழுதி சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த அறிவிப்பு நிருவாக ஊழியர்களுக்கு மட்டுமே ஆகும் என்று விளக்கமளிக்கபட்டது. [4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia