யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு
![]() யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு (Joseph Pitton de Tournefort, 5 சூன், 1656 — 28 திசம்பர், 1708) என்ற தாவரவியல் பேரறிஞர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல் வகைப் பாட்டியல் அலகான பேரினம் என்பதனை விரிவாக எடுத்துரைத்தவர். இவரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் சிலவற்றின் அடியொற்றியே, லின்னேயசு தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். பேரினம் என்ற அலகானது, லின்னேயசின் ஐந்து அலகுகளில் ஒன்றாகும். Tourn என்ற தாவரவியல் குறுக்கம், இவரின் நினைவாகப் பயன்படுத்தப் படுகிறது. வாழ்க்கைச்சுருக்கம்இளமைக்கல்வியை இயேசு சபையில் கற்றார். அதன் பிறகு தேவாலயம் த்தில் இணைய இருந்த போது, அவரது தந்தை இறந்தார். தந்தையின் இறப்பினால், அவருக்கு தாவரவியலில் ஆர்வம் ஏற்பட்டது. இரண்டு வருடம் பல்வேறு தாவரவியல் விவரங்களைச் சேகரித்தார். பின் மருத்துவம் படித்தார். ஆனால், 1683 ஆம் ஆண்டு கல்லூரிப் பேராசிரியராக பாரிசு' நகரிலுள்ள சார்டினில்[note 2] என்பதில் அமர்த்தப்பட்டார். பல்வேறு தாவரவியல் கொள்கைகள் ஆராய்ச்சி செய்தார். பின் அவராக பயணிக்கும் போது விபத்தால், பாரிசு நகர வீதியில் இறந்தார். அவர் இறந்த இடம், அவரது பெயராலே[note 3] இன்றும் அழைக்கப்படுகிறது. ஆராய்ச்சிதாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Joseph Pitton de Tournefort என்பவரை, Tourn. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[1] படைப்புகள்
உயவுத்துணை
இதர இணைய இணைப்புகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia