ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா தாக்குதல், 2017
2017, ஜூன் 2 ஆம் தியதி பிலிப்பைன்ஸ் நாட்டின் பேசி நகரில் அமைந்துள்ள ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா கட்டிடத்தில் தாக்குத்ல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் துப்பாக்கிச் சூடு மற்றும் தீக்கிரையாக்கல் ஆகிய சம்பவங்கள் நடைபெற்றன.[2] இதில் 36 பேர் கொல்லப்பட்டனர்.[3] ஊடகங்கள் இது தீவிரவாதச் செயலாக இருக்கலாம் எனச் செய்திவெளியிட்ட போதும் பிலிப்பைன்ஸ் தேசிய காவல் துறை இது கொள்ளை முயற்சி எனத் தெரிவித்தது.[4] தாக்குதல்ஜூன் 2, 2017 நள்ளிரவிற்குப் பின்னர் ரிசார்ட்ஸ் வேல்டு மணிலா கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் இசுலாமிய அரசு அமைப்பின் தாக்குதலாக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.[5] சூதாட்ட மையம் மற்றும் தங்கும் விடுதி அமைந்துள்ள இரண்டாவது மாடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 54 பேர் காயமடைந்தனர். இதில் பாதுகாப்பு பணியாளரும் ஒருவர். அவர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதால் காயமடைந்தார்.[6] சூதாட்ட மேசையில் எரிபொருளை ஊற்றி தாக்குதல்தாரி தீவைத்ததால் ஏற்பட்ட புகையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.[7] தாக்குதலாளி கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலாளியின் கைப்பயிலிருந்து 23 இலட்சம் அமெரிக்க டாலர்கள் (11.3 கோடி பிலிப்பன்ஸ் பெசோ) மதிப்புடைய சூதாட்ட வில்லைகள் (Gaming chips) கைப்பற்றப்பட்டன. தாக்குதலில் தாக்குதல்தாரி கொல்லப்பட்டார்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia