வடகன்னிகாபுரம் தொடருந்து நிலையம்
வடகன்னிகாபுரம் தொடருந்து நிலையம் (Vadakannikaapuram railway station) என்பது பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையை உள்ள ஒரு கிளைப் பாதையாகும்.[1] இது பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது. வரலாறுவடகன்னிகாபுரத்தில் 1898 இல் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகர தொடருந்து நிலையங்களுக்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது.[2] இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையான மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.[3] அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன.[3] 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்தப் பாதை அங்கீகரிக்கப்பட்டது.[4] முன்பு இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டுவந்த ஐந்து விரைவு வண்டிகள் பின்னர் நிற்காமல் சென்றன. ஆனால் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூர் செல்லும் தொடருந்து மட்டும் இங்கு நிறுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடருந்து நிலையத்தை தெற்கு இரயில்வே மூட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia