வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள்
ஒருங்கிணைப்பு நாள் (Reunification Day) (Ngày Thống nhất), வெற்றி நாள் (Victory Day) (Ngày Chiến thắng) அல்லது விடுதலை நாள் (Liberation Day) (Ngày Giải phóng அல்லது Ngày Giải phóng miền Nam) அல்லது தேச ஒருங்கிணைப்புக்கு தெற்கின் விடுதலைபெற்ற நாள் (Giải phóng miền Nam, thống nhất đất nước) எனும் அலுவல்பெயர் உள்ள நாள்[1] என்பது வியட்நாமில் ஒரு பொது விடுமுறை நாளாகும். இது வியட்காங் படையும் வடக்கு வியட்நாம் படையும் சாய்கோன் தலைநகரைக் கைப்பற்றிய நாளைக் குறிக்கிறது. சாய்கோன் வீழ்ந்த, 1975 ஏப்பிர்ல் 30 இல் இருந்து இது ஓ சி மின் நகரம் என வழங்குகிறது. இது வியட்நாம் போரின் முடிவைச் சுட்டுகிறது. வியட்நாம் போர் வியட்நாம் மொழியில் Chiến tranh Việt Nam (Vietnam War) அல்லது Kháng chiến chống Mỹ cứu nước ("அமெரிக்க முற்றுகையைத் தகர்த்த போர்") எனப்படுகிறது. இது வியட்ந்நம் ஒருங்கிணைப்புக்கான மாற்றக்காலத் தொடக்க நாளாகும். வியட்நாம் 1976 ஜூலை 2 இல் ஒருங்கிணைந்தது. அப்போது தென்வியட்நாம் குடியரசு, வடக்கு வியட்நாம் குடியரசு ஆகிய இரண்டின் புரட்சி அரசுகள் இணைந்து, தற்கால வியட்நாம் அல்லது வியட்நாம் சமவுடைமைக் குடியரசு உருவாகியது. இந்த விடுதலை நாள் பல்வேறு விழாக்களாகக் கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு புலம்பெயர் வியட்நாமியர்கள் இந்நாளை "சாய்கோன் வீழ்ச்சி", "கருப்பு ஏப்பிரல் (Tháng Tư Đen)" அல்லது [2][3][4][5][6][7] தேசிய வெட்குதல் நாள் (Ngày Quốc Nhục) அல்லது தேசிய வருத்த நாள் (Ngày Quốc Hận) என நினைவுகூர்கின்றனர்.[3][8][9][10][11] இது புலம்பெயர் வியட்நாமியருக்கு தங்கள் அவலத்தின் நினைவுகூர் நாளாக அமைகிறது. காட்சி மேடை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia