வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′19″N 80°12′23″E / 13.105150°N 80.206390°E ஆகும். இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் (செவ்வாய் தோசம் நீக்கும்) கோயில்களில் ஒன்றாகும்.[2] அகத்திய முனிவர் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்ட தலங்களில் ஒன்றான இக்கோயிலில், பெண்கள் செவ்வாய் கிழமைகளில் பெருந்திரளாக வந்து செல்கின்றனர்.[3] சுமார் ஐநூறு ஆண்டுகள் தொன்மையான கோயில் என்ற வரலாற்று சிறப்பு மிக்கது இவ்வாலயம்.[4] இறைவி சொர்ணாம்பிகை சமேத மூலவராக இறைவன் அகத்தீசுவரர் வீற்றிருக்கும் இக்கோயிலின் தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.[5] இந்த தீர்த்தத்தின் கரையில் அங்காரகன் (செவ்வாய்) காட்சியளிப்பதால், 'செவ்வாய் கோயில்' என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.[6] பொதுவாக, ஒரு கோவிலின் நுழைவாயில் கிழக்கு நோக்கி இருக்கும்; ஆனால் இந்தக் கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது.[7] இக்கோயிலின் இறைவன், இறைவியுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியருளியது ஓர் ஆடி மாதம் செவ்வாய் கிழமை என்று கருதப்படுவதால், ஆடி மாதம் செவ்வாய் அன்று வழிபாடு சிறப்புடையதாகும் என்று நம்பப்படுகிறது.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia