ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி
ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் உள்ளது.[2] தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமையான கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தொடக்கம்1806இல் மைலாடியில் ஒரு கல்வி நிறுவனத்திற்கான தொடக்கப்புள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து 1983இல் நாகர்கோயிலுக்கு மாற்றப்பட்டது. 13 பிப்ரவரி 1893 இல் அதிகாரப்பூர்வமாக இக்கல்லூரி தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[3] 1971 இல் இடப்பற்றாகுறையின் காரணமாக, இக்கல்லூரி தற்பொழுதுள்ள பார்வதிபுரத்திற்கு மாற்றப்பட்டது. முதலில் இருந்த இடத்தில் தற்பொழுது 'மகளிர் கிருத்துவ கல்லூரி, நாகர்கோயில்' செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இக்கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. 1990 களில் இருந்து தொடங்கப்பட்ட புதிய படிப்புகள் அனைத்தும் சுயநிதி படிப்புகளாகத் தொடங்கப்பட்டது.[3] தன்னாட்சி2005-2006 கல்வியாண்டில் இருந்து, இக்கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக் குழுவினால் தன்னாட்சி தகுதி நிலை வழங்கப்பட்டது.[4] மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia