ஸ்ரீசுப்பிரமணியத் தேசிகர் நெஞ்சுவிடு தூதுகாதல் உணர்வை வெளிப்படுத்த நிலைக்களமாக உள்ள இலக்கிய வகை தூது. ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது என்பது தூது மரபைக் கையாண்டு குருபக்தியை வெளிப்படுத்தும் விதமாகத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய நூலாகும். நூல் வரலாறுதிருவாவடுதுறை ஆதீனத்து 16-ஆவது சந்நிதானமாக விளங்கியவர் சுப்பிரமணிய தேசிகர். இவர்பால் அன்பு கொண்டு வாழ்ந்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. அவர் தம் குருவாகிய சுவாமிகள் மீது தம் நெஞ்சத்தைத் தூது விடுப்பதாக எழுதப் பெற்ற நூல் இதுவாகும். இந்நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், 311 கண்ணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு 1960-ஆம் ஆண்டு த. ச. மீனாட்சிசுந்தரம் குறிப்புரை ஒன்று எழுதி வெளியிட்டுள்ளார். நூலாசிரியர்ஆதீனத்தில், மகாவித்வான் பட்டம் பெற்றவர். தலப் புராணங்கள் பல பாடியுள்ளார். சுப்பிரமணிய தேசிகர் மாலை எனும் நூலையும், 15-ஆவது பட்டத்து சுவாமிகள் மீது கலம்பகம், பிள்ளைத் தமிழ் ஆகிய இரு நூல்களையும் இயற்றியுள்ளார். நூற் சிறப்புகள்
உசாத்துணைதிரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய," ஸ்ரீசுப்பிரமணியதேசிகர் நெஞ்சுவிடு தூது"- திருவாவடுதுறை ஆதீனம்-2015. |
Portal di Ensiklopedia Dunia