அகிரா (2016 இந்தித் திரைப்படம்)
அகிரா (Akira)என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழி அதிரடித் திகிலூட்டும் திரைப்படமாகும். இத்திரைப்படம் ஏ. ஆர். முருகதாஸ் இணைந்து எழுதி, தயாரித்து இயக்கியதாகும். இது 2011 ஆம் ஆண்டு தமிழ் மொழித் திரைப்படமான மௌனகுருவின் மறு ஆக்கம் ஆகும், இத்திரைப்படத்தில் சோனாக்சி சின்கா, கொன்கனா சென் சர்மா மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[5] இத்திரைப்படத்தின் முதன்மை படப்பிடிப்பு மார்ச் 2015 இல் தொடங்கப்பட்டது. இத்திரைப்படம் செப்டம்பர் 2,2016 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.[6][7] விஷால்-சேகர் இசையமைத்த இத்திரைப்படத்தின் ஒலிப்பதிவு 16 ஆகஸ்ட் 2016 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நடிகர்களின் நடிப்பிற்காக பாராட்டப்பட்ட இத்திரைப்படம் எழுத்துக்காக விமர்சிக்கப்பட்டது.[8][9] அகிரா - தி கேம் என்ற டை-இன் ஆக்சன் திறன்பேசி காணொலி விளையாட்டொன்றும் படத்துடன் வெளியிடப்பட்டது. இந்த காணொலி விளையாட்டினை விரூவி உருவாக்கினார். கதைக்களம்அகிரா ஷர்மா என்ற இளம் பெண், ஒரு பெண்ணின் முகத்தில் ஆண்கள் அமிலம் வீசுவதைக் காண்கிறாள். இப்பெண் குற்றவாளிகளில் ஒருவரைப் பிடிக்க போலீசாருக்கு உதவுகிறாள், எனவே குற்றம் சாட்டப்பட்டவரால் துன்புறுத்தப்படுகிறாள். இப்பெண்ணால் காவல்துறைக்குக் காட்டிக் கொடுக்கப்பட்ட நபர் பழிவாங்கும் விதமாக அகிராவின் முகத்தை வெட்டி, அவளுக்கு அழிக்க இயலா வடுக்களை ஏற்படுத்துகிறார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, அகிரா சரமாவின் தந்தை அவளை தற்காப்பு வகுப்பில் சேர்க்கிறார். சில நாட்களுக்குப் பிறகு, முன்பு தப்பியோடிய அதே ஆண்களை அவள் சந்தித்து அவர்களைப் பிடிக்க முயற்சிக்கிறாள். அவர்களில் ஒருவர் அவள் மீது அமிலத்தை வீச முயற்சிக்கிறார், அப்போது நடக்கும் சண்டையில் அமிலம் வீச முயன்றவரின் முகத்திலேயே அது படுகிறது. அகிரா கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அகிரா விடுவிக்கப்பட்டு பின்னர் ஒரு கலகக்கார துணிச்சலான பெண்ணாக வளர்கிறார். அவள் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கும் போது, அவளுடைய சகோதரர் அவளுடைய தாயையும் அவளையும் அழைத்துச் செல்ல வருகிறார். இந்நிலையில் இவர் ஜோத்பூரிலிருந்து மும்பைக்குக் குடிபெயர நேரிடுகிறது. அங்கு அகிரா ஒரு கல்லூரியில் சேர்ந்து விடுதியில் வாழத் தொடங்குகிறாள், அங்கு தனது இயல்பான நடத்தையிலிருந்து சாதாரண வாழ்க்கைக்கு ஏற்ப மாறி வாழ கஷ்டமாக உணர்கிறார். கல்லூரியில் மின்னணுவியல் பொருட்கள் திருடப்படுவதால், கல்லூரி ஒரு திருட்டு மாணவரைக் கையாள்கிறது. ஊழலில் திளைக்கும் ஒரு காவல்துறை உதவி ஆணையரான ரானே குடிபோதையில் ஒரு வயதான கல்லூரிப் பேராசிரியரை தனது காரால் இடித்ததோடு அடிக்கவும் செய்யும்போது, கல்லூரி மாணவர்கள் ஒரு பெரிய போராட்டத்தை நடத்துகிறார்கள். போராட்டங்கள் வன்முறையாக மாறுகின்றன, இருப்பினும் அகிரா பொறுமையுடன் தங்கள் மனுவை ஆணையரிடம் ஒப்படைக்கக் காத்திருக்கிறார். ஓரிரு நாட்களுக்குப் பிறகு, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவ ரானே செல்கிறார், ஆனால் அவரது கையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள் இருப்பதைக் கண்டதும், அவரிடமிருந்த பொருளைக் கொள்ளையடித்ததோடு கொன்றும் விடுகிறார். அகிராவின் அதே கல்லூரியில் பாதிக்கப்பட்டவரின் காதலி மாயா, ஆதாரங்களை அகற்றுவது குறித்த அவரது உரையாடலை இரகசியமாகப் பதிவு செய்கிறார். இருப்பினும், ஒளிப்படக்கருவியுனான அவரது பை திருடப்பட்டு, யாரோ ரானேவை பணத்திற்காக மிரட்டத் தொடங்குகிறார்கள். ரானே மாயாவை சந்தேகித்து, அவளை கொடூரமாகக் கொல்கிறார். மாயாவின் கொலை மீதான சந்தேகம் காரணமாக இவ்வழக்கை காவல் துறை கண்காணிப்பாளர் ராபியா கையாளுகிறார். இதற்கிடையில், திருடப்பட்ட அனைத்து பொருட்களையும் அநாமதேயமாக திருப்பிக் கொடுத்தால் மின்னணு திருடனை மன்னிக்கப்போவதாக கல்லூரி அறிவிக்கிறது. அகிரா தனது தங்குமிடத்திற்கு முன்னால் ஒளிப்படக் கருவி உட்பட திருடப்பட்ட பொருட்கள் நிறைந்த ஒரு பையைக் காண்கிறார். ரானேவின் கூட்டாளிகள் அவளை ஒளிப்படக்கருவி மற்றும் இதர பொருள்களுடன் பிடித்து அவளையும் மற்ற இரண்டு சாட்சிகளையும் கொல்ல முடிவு செய்கிறார்கள். இருப்பினும், மற்ற இருவரையும் கொன்ற பிறகு தங்கள் துப்பாக்கியில் குண்டுகளை மீண்டும் நிரப்பும் இடைவெளியில் அகிரா தப்பிக்கிறாள். ரானேவும் அவரது ஆட்களும், அகிரா மனநிலை சரியில்லாதவர் என்று அறிவிக்கிறார்கள். அவரது வன்முறையான கடந்த காலத்தையும், அவரது கலகக்கார நடத்தையையும் கருத்தில் கொண்டு, அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரது நண்பர்களும் இதை எளிதில் நம்புகிறார்கள். அவள் ஒரு மனநலக் காப்பத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள், ஒரு ஊழல் மருத்துவரின் உதவியுடன், அவளுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்ய மின்சார அதிர்ச்சிகளைக் கொடுக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளியின் உதவியுடன், அவள் மருத்துவர்களையும் காவலர்களையும் கொடூரமாக கொன்று தப்பிக்கிறாள். அவள் ரானேவின் கூட்டாளிகளில் ஒருவரைக் கடத்தி, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அவரை அச்சுறுத்துகிறாள். இருப்பினும், ரானே அகிராவின் மறைவிடத்தைக் கண்டுபிடித்து அவளைத் தாக்குகிறார். ராபியா, ரானேவைப் பிடிப்பதற்கான கைது-உத்தரவுடன் வந்து அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றுகிறார், ஆனால், கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு பெரிய அரசியல்வாதியின் சகோதரர்-அவரது கொலை பற்றிய செய்தி வெளிவந்தால் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தால் காவல் துறை ஆணையரால் அவ்வாறு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார். ரானே குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும் காவல் துறை ஆணையர் அகிராவை மனநலக் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிடுகிறார். உதவியின்றி, ராபியா வெளியேறுகிறார், ஆனாலும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை அமைதியாக எடுத்துச் செல்கிறார், உள்ளே இருந்தவர்களை நிராயுதபாணியாக விட்டுவிடுகிறார். அகிரா ரானே மற்றும் அவரது கூட்டாளிகளை எளிதில் கொன்றுவிட்டு மீண்டும் மனநல முகாமுக்குச் செல்கிறார். முற்றிலும் புத்திசாலித்தனமாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்படுகிறார். இறுதியில், ஜோத்பூரில் தனது மறைந்த தந்தையின் வாழ்க்கையை வாழத் தொடங்கி, அங்கு காது கேளாத குழந்தைகளுக்கு கற்பித்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். வரவேற்புவிமர்சன ரீதியான வரவேற்புவிமர்சனம் திரட்டும் வலைத்தளமான ராட்டன் டொமாடோஸில், 9 விமர்சனங்களின் அடிப்படையில் 33% ஒப்புதல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, சராசரி மதிப்பீடு 5.60/10. அனுபமா சோப்ரா படத்திற்கு 2.5/5 என்ற மதிப்பீட்டை வழங்கி சின்ஹா, காஷ்யப் மற்றும் ஷர்மாவின் நடிப்பைப் பாராட்டினார், ஆனால் இரண்டாம் பாதியை விமர்சித்தார்.[10] அன்னா மே. மே. வெட்டிக்காடு, நடிகர்களின் நடிப்பைப் பாராட்டியுள்ள அதே நேரத்தில், கதாபாத்திரங்களின் வளர்ச்சியை விமர்சித்தார். சின்ஹாவின் கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை, "முழு கதையிலும் மிகவும் மோசமாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் அகிரா... எந்த ஆணையும் போலவே திறமையாகவும் வலுவாகவும் போராடக்கூடிய ஒரு பெண். அவ்வளவுதான். அவரது மனதின் செயல்பாடுகள், அவரது உந்துதல்கள் மற்றும் அவரது உணர்வுகள் மர்மமாகவே இருக்கின்றன". என்று எழுதியுள்ளார். இருப்பினும், காஷ்யப் ரானே என்ற பாத்திரப்படைப்பில் வெளிப்பட்டதைப் பாராட்டியுள்ளார். இது "சிறப்பாக எழுதப்பட்ட பாத்திரம்" என்று அழைத்தார்.[11] வசூல் ரீதியான வரவேற்புஇந்தியாஇத்திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் ₹56 மில்லியன் (650,000 அமெரிக்க டாலர்கள்) வசூலித்தது. அதன் முதல் வார இறுதியில், அகிரா ₹170 மில்லியன் (2.0 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வசூலித்தது. அதன் முதல் வார வசூல் உள்நாட்டில் சுமார் ₹223 மில்லியன் (2.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆக இருந்தது. வெளிநாடுகளில்அகிரா வட அமெரிக்கா (அமெரிக்கா மற்றும் கனடா) ₹14.2 மில்லியன் (160,000 அமெரிக்க டாலர்), ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ₹28.2 மில்லியன் (330,000 அமெரிக்க டாலர்), இங்கிலாந்திலிருந்து ₹ 6.1 மில்லியன் (70,000 அமெரிக்க டாலர்கள்) வசூலித்தது. மேலும், பாகிஸ்தானில் இருந்து ₹7.8 மில்லியன் (US $90,000) வசூலித்தது.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia