அக்கரம்பல்லி
அக்கரம்பல்லி (Akkarampalle) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். திருப்பதி நகர மண்டலத்தின் திருப்பதி வருவாய் வட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளது.[1] புவியியல் அமைப்பு13°39′00″ வடக்கு 79°25′12″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அக்கரம்பல்லி பரவியுள்ளது. மக்கள் தொகையியல்இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அக்கரம்பல்லி ஊரின் மக்கள் தொகை 20,325 ஆகும். இத்தொகையில் 51 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 49 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இவ்வூரின் படிப்பறிவு 62% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 57% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 43% ஆகவும் இருந்தது. மக்கள் தொகையில் 13% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்[2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia