அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் தில்லி (All India Institute of Medical Sciences Delhi, AIIMS Delhi) இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரியும் மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகமும் ஆகும். 1956ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நிறுவப்பட்டது; தன்னாட்சி பெற்ற இந்த மருத்துவக் கழகம் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்குகின்றது. அமைவிடம்![]() ஏய்ம்சு தில்லியின் அன்சாரி நகரில் அமைந்துள்ளது. தென் விரிவாக்கம்-II சந்தைக்கு அருகே, அரவிந்தர் மார்க், வட்டச்சாலை சந்திப்பின் தென்கிழக்கு மூலையில் உள்ளது. ஏய்ம்சிற்கு நேரெதிரே சஃப்தர்ஜங் மருத்துவமனையும் அதனுடன் தொடர்புடைய வர்த்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து நிதி வழங்கும் இந்திய மருத்து ஆய்வுக் குழுமத்தின் (ICMR) தலைமையகமும் அருகிலேயே உள்ளது. இந்த வளாகங்களுக்கு அருகிலுள்ள இந்திய அரசின் மருத்துவச் சேவைகளின் தலைமை இயக்குநரின் கீழுள்ள தேசிய மருத்து நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான மருத்துவ, அறிவியல் இதழ்களின் தொகுப்புக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஏய்ம்சு-II![]() 2009ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் ஏய்ம்சின் தலைவருமான மரு.அன்புமணி ராமதாஸ் மற்றும் ஏய்ம்சு இயக்குநர் பேரா.தீரத்தாசு டோக்ராவின் முனைப்பில் அனைத்திந்திய மருத்துவ இரண்டாம் வளாகம் (ஏய்ம்சு-II),அரியானாவின் ஜாஜர் மாவட்டத்தில் பத்சா சிற்றூரில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட்டது. உலகின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக்கான மையங்களில் மிகப் பெரியதாக ஏய்ம்சு-II முன்னெடுக்கப்பட்டது.[1] 2012ஆம் ஆண்டு மே 30 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[2] ₹10 பில்லியன் (ஐஅ$120 மில்லியன்) செலவில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.[3][4] இதன் வெளிப்புற நோயாளிப் பிரிவை சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் நவம்பர், 24, 2012இல் திறந்து வைத்தார்.[5][6] இந்த வளாகத்தில் தேசிய புற்றுநோய் கழகத்தையும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.[7] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia