அம்மாசத்திரம்
அம்மாசத்திரம் (ஆங்கிலம்: Ammachatram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இங்கமைந்துள்ள காலபைரவர் திருத்தலமான ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் சிறப்பான மிகப்பழைமையான திருத்தலம்.[4] மக்கள்தொகை2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அம்மாசத்திரம் மக்கள்தொகை 2967 ஆக உள்ளது. இதில்1455 ஆண்களும் 1512 பெண்களும் உள்ளனர், மாநில சராசரியான 996 உடன் ஒப்பிடும்போது இக்கிராமத்தின் பாலின விகிதம் 1039 ஆகும். கல்வியறிவு மாநில சராசரியான 80.09% உடன் ஒப்பிடும்போது 85.09% ஆகும். பெயர்க்காரணம்"பவிஷ்யோத்த புராணத்தில்" "பைரவபுரம்" என்று பரிந்துரைக்கப்பட்ட ஒரு பண்டைய கிராமம் சில காலத்திற்குப் பிறகு "சக்குவாம்பாள்புரம்" அல்லது "அம்மணி அம்மாள் சத்திரம்" என்று அழைக்கப்பட்டது. இது தற்போது தமிழில் அம்மாசத்திரம் என்று உச்சரிக்கப்படுகிறது. ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia