அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி (ஆங்கிலம்:Arulmigu Palaniandavar College of Arts and Culture) என்பது திண்டுக்கல் பழனியில் உள்ள தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும். இது இந்து சமய அறநிலையத் துறையின் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது.[1] என்ஏஏசி தரமதிப்பீட்டில் பி++ பெற்றுள்ளது.[2] தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆட்சிக்குழுவின் தலைவராகவும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர்/ செயல் அலுலவர் கல்லூரியின் தாளாளராகவும் துணை ஆணையர் இக்கல்லூரியில் செயலராகவும் உள்ளனர்.[3] துறைகள்அரசு உதவி பெறும் துறைகளாக தமிழ், ஆங்கிலம், வரலாறு, இந்தியப் பண்பாடு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் ஆகியவை உள்ளன. சுயநிதிப் பிரிவில் உள்ள துறைகளாக தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் இளநிலை வணிக நிர்வாகவியல் ஆகியவை உள்ளன.[4] இளநிலைப் படிப்புகள்
முதுநிலைப் படிப்புகள்
தமிழ், இந்தியப் பண்பாடு, வேதியியல், விலங்கியல், ஆங்கிலம், தாவரவியல் ஆகிய துறைகளில் ஆய்வுப் படிப்புகளையும் வழங்குகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia