திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் (Dindigul district) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திண்டுக்கல் ஆகும். இம்மாவட்டம் பூட்டு மற்று தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது. இந்த மாவட்டம் 6,266.64 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. வரலாறுதிண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டன்சத்திரம், மற்றும் கொடைக்காணல் ஆகிய வட்டங்கள் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் பகுதிகளாக இருந்தது மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், மற்றும் கொடைக்காணல் வட்டங்கள் கொங்கு நாட்டை சேர்ந்தது. திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் மற்றும் வேடசந்தூர் வட்டங்கள் முந்தைய மதுரை மாவட்டத்தில் பகுதிகளாக இருந்தது மற்றும் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் வட்டங்கள் பாண்டிய நாட்டை சேர்ந்தது. 1985-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பலகாலம், மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும். திண்டுக்கல் தொன்று தொட்டு சேரர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில் தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால், இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை, குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.[சான்று தேவை] மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் என 3 வருவாய் கோட்டங்களாகவும், 10 வருவாய் வட்டங்களாகவும்[1] மற்றும் 361 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[2] வருவாய் வட்டங்கள்
உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்உள்ளாட்சி அமைப்புகள்இம்மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி[3] மற்றும் பழனி [4], ஒட்டன்சத்திரம்[5] & கொடைக்கானல்[6] என 3 நகராட்சிகளும் மற்றும் 23 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.[7] அகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயக்குடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு · வேடசந்தூர் · ஊராட்சி அமைப்புகள்இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[8] கொண்டது. அவைகள்;
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 21,59,775 மக்கள் வசிக்கின்றார்கள்.[10] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 76.26% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84.23%, பெண்களின் கல்வியறிவு 68.33% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10.03% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். அரசியல்இம்மாவட்டம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[11] சட்டமன்றத் தொகுதிகள்எல்லைகள்வடக்கில் திருப்பூர், கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை, தென்மேற்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஒட்டன்சத்திரம் ஆகும். தமிழ்நாட்டிலேயே கோயம்பேடுக்கு, அடுத்ததாக கருதப்படும் மிக பெரிய காய்கறி சந்தை இங்கு அமைந்துள்ளது.[சான்று தேவை] இந்த பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுமேயாகும். இந்த சந்தை பகுதியில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. ஆன்மிக & சுற்றுலாத் தலங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia