அல்-பதர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்)அல்-பதர் (Al-Badr, அரபி : البدر) எனும் அரபி மொழிச் சொல்லுக்கு முழு நிலவு என்று பொருள். இது ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஜஸ்நீல் நிஹால் என்பவரால் நடத்தப்படும் போராளிக்குழு ஆகும்.[1][2][3][4][5] இக்குழுவை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஆரம்பித்து ஊக்குவித்து வருகிறது. தனது முந்தைய குழுவான ஹிஸ்புல்-முஜாகிதின்லிருந்து சுதந்திரமாக இயங்க இக்குழுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ உதவி வருகிறது. தலைமைஇப்போரளிக்குழுவானது முதலில் அர்ஃபீன் பாய் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர் ஜென்னீசார் அல்லது லுக்மான் என்றும் அழைக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு அவரது விலகலுக்குப் பி்றகு தற்போது இக்குழுவின் தலைவராக பகத் ஜமீன் கான் உள்ளார்.[1][2][3][5] பயிற்சி முகாம்கள்அல்-பதார் போராளிக் குழுவுக்கான பயிற்சி முகாம்கள் பாகிஸ்தானில் உள்ளன. பாகிஸ்தான் மக்களுக்கு பயிற்சியளித்து காஸ்மீரில் சண்டையிட அனுப்புகிறது.[6][7][8] தடைஅல்-பதர் குழுவுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தடைவிதித்துள்ளன.[9][10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia