அஸ்மா ஜெகாங்கீர்
அஸ்மா ஜிலானி ஜெகாங்கீர் (Asma Jilani Jahangir, Urdu: عاصمہ جہانگیر) (பிறப்பு லாகூரில் சனவரி 27, 1952 - 11 பெப்ரவரி, 2018)[1] பாக்கித்தானின் முன்னணி வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் குழாம் சங்கத் தலைவர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஆவார். சமயச் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான உரிமையடக்கலைத் தடுக்கவும் சிறுவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் பாக்கித்தானிலும் உலகளவிலும் செயற்பட்டு வருபவர். இவர் ஆகத்து 2004 முதல் சூலை 2010 வரை சமய அல்லது நம்பிக்கை உரிமைக்கான ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு விசாரணையாளராக இருந்துள்ளார். இது முன்னதாக மனித உரிமைகள் ஆணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தது; தற்போது மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐநாவின் நீதிமன்றப் புறம்பான, விதிக்கட்டில்லாத,உடனடி மரண தண்டனைகளுக்கான சிறப்பு விசாரணையாளராகவும் இருந்துள்ளார். பாக்கித்தானின் மனித உரிமைகள் குழுத் தலைவராகவும் உள்ளார். இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.[2][3] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia