ஆண்டாள் அழகர்
ஆண்டாள் அழகர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 8 செப்டம்பர் 2014 முதல் 6 மே 2016 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு கிராமத்து சூழலை கொண்ட காதல் மற்றும் குடும்பத் தொலைக்காட்ச்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை 'பிரான்சிஸ் கதிரவன்' என்பவர் இயக்க, பூர்ணிதா, ரிஷிகேஷ், ஸ்டாலின் மற்றும் ரம்யா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 6 மே 2016 ஆம் ஆண்டு 416 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இதன் இரண்டாம் பாகம் பகல் நிலவு என்ற பெயரில் 9 மே 2016 முதல் 9 மார்ச்சு 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த தொடர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் தொலைக்காட்சி விருதுகள் விழா நிகழ்ச்சியில் சிறந்த தொடர், சிறந்த துணைக்கதாபாத்திரம் ஆண், நடுவர் சிறப்பு விருது போன்ற விருதுகளை வென்றுள்ளது. கதை சுருக்கம்இந்த தொடரின் கதை ஆண்டாள் குடும்பம் மற்றும் அழகரின் குடும்பத்தினர் பல வருடங்களாக மோதலுடன் இருக்கின்றனர், இந்த நடுவில் ஆண்டாள் குடும்பம் மற்றும் அழகர் இருவரையும் காதலித்து வந்தனர். இதனால் இரு குடும்பங்களுக்கிடையே மீண்டும் வரும் பிரச்சனைகளையும் இவர்களின் காதலையும் பற்றி கதை சொல்லப்படுகின்றது. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்நேரம் மாற்றம்இந்த தொடர் 19 நவம்பர் 2014ஆம் ஆண்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் 11 ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia