ஆரணி நகராட்சி
ஆரணி நகராட்சி (ஆங்கிலம்:Aarani Municipality) இந்தியாவில், தமிழ் நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தில் இந்த நகராட்சி அமைந்துள்ளது. 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சியும் உள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இரண்டாவது வருவாய் கோட்டமான வருவாய் கோட்டம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. தற்போது புதிய பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி இங்கு அமைந்துள்ளது. இந்நகராட்சியில் புகழ்பெற்ற வேம்புலியம்மன் ஆலயம் மற்றும் புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம் மற்றும் நிர்வாக வசதிக்காக 2 பேருந்து நிலையங்கள் இங்கு அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி செய்யாறு ஆறு மற்றும் பாலாற்றின் துணை ஆறான கமண்டல நாகநதி ஆறு இங்கு அமைந்துள்ளது. அமைவிடம்இவ்வூரின் அமைவிடம் 12.67°N 79.28°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 மீட்டர் (495 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆரணி நகராட்சி கமண்டல நாகநதியின் தெற்கே அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 முக்கிய நகரங்களில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு மற்றும் பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் இந்த ஆரணி நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணிக்கு இன்னும் ஒரு பெயரும் உண்டு. அது ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி) எனவும் அழைப்பர். அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆரணி 76 வது பெரிய நகரமாக அமைந்துள்ளது. மக்கள் தொகை2
[1]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரணி நகரம், 33 வார்டுகளில் இருந்து மக்கள் தொகை 63,671. ஆண், பெண் விகிதம், 1,036 பெண்களுக்கு ஒவ்வொரு 1,000 ஆண்கள் ஆகும். தேசிய சராசரியை விட 929 அதிகம், ஆனால் நீட்டிக்கப்பட்ட நகரம் உட்பட அனைத்து துணை நகர்ப்புற பகுதியில் இருந்து மக்கள் தொகை 92,375. ஆறு வயதுக்கு கீழ் 6,346 பேரும் அவர்களில் 3,200 ஆண்களும் மற்றும் 3,146 பெண்களும் ஆவர். சராசரி கல்வியறிவு சதவிகிதம் 76.9% . இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது 72.99%. மொத்தம் 14889 குடும்பங்களில் 23,298 தொழிலாளர்களில், 153 பேர்பயிர், 343 பேர் முக்கிய விவசாய தொழிலாளர்கள், 2,185 பேர் வீட்டு தொழில்கள், 17,919 பேர் மற்ற தொழிலாளர்கள், 2,698 பேர்குறு தொழிலாளர்கள், 33 பேர்குறு விவசாயிகளும், 100 பேர்குறு வேளாண் தொழிலாளர்களும், 224 பேர்குறு தொழிலாளர்கள் வீட்டு தொழில்கள் மற்றும் 2,341 பிற குறு தொழிலாளர்கள். என உள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, அரணி (எம்) இருந்தது மத வாரியாக 89.16% இந்துக்கள், 7.39% முஸ்லிம்கள், 1.8% கிரிஸ்துவர், 0.01% சீக்கியர்கள், 0.01% புத்த மதத்தினர், 1.43% சமணர்கள், 0.19% ஆவர்.
நகராட்சி நிர்வாகம்
பட்டு மற்றும் அரிசி நகரம்
புறநகர் பகுதிஆரணியின் புறநகர் பகுதிளான சத்திய விஜய நகரம், இரும்பேடு, பையூர், வடுகசாத்து, விளை சித்தேரி, தச்சூர், ராட்டிணமங்கலம், அண்ணா நகர், முள்ளிப்பட்டு, ஹவுசிங் ஃபோர்டு, சேவூர், அக்ரா பாளையம், மெய்யூர், அடையபுலம், வேலப்பாடி, ஆகிய பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகள் ஆரணி நகரை சார்ந்து அமைந்துள்ளது. இந்த பகுதிகளிலிருந்து தோராயமாக 45000 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கோரிக்கை ஆரணி நகராட்சி எல்லைக்குள் வரும்படி சேர்க்க வேண்டும் என்பது தான். அப்படி இந்த பகுதிகளை ஆரணி நகராட்சியும் சேர்த்தால் ஆரணியானது பெருநகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ வழி வகுக்கும். சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia