எம். கே. விஷ்ணு பிரசாத்
எம். கே. விஷ்ணு பிரசாத் (M. K. Vishnu Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும், கடலூர் மக்களவைத் தொகுதியின், பதினெட்டாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரிவான தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர்களில் ஒருவராக உள்ளார்.[1] குடும்பம்இவர் காங்கிரசின் முன்னாள் தலைவரான எம். கிருஷ்ணசாமியின் மகனும்,[2] பா.ம.க சௌமியா அன்புமணியின் அண்ணனும் ஆவார். அரசியல் வாழ்க்கைஇவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், செய்யாறு தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் ஆரணி தொகுதியிலிருந்தும், [3][4] 2024 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia