ஆரணி ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம்
ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம் (ஆங்கிலம்:Sri Vembuliyamman Temple) தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரில் ஆரணி கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு புனிதத் தலமாகும். தல வரலாறுஆரணி கோட்டை மைதானத்தில் காவலர் விடுதி அருகே வேப்பமரத்தடியில் திரிசூலம் ஏந்தி பல வருடங்களாக வழிப்பட்டு வந்தனர் என வரலாறு உண்டு. ஆரணி நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த கோவிந்தசாமி என்பவர் திரிசூலம் உள்ள இடத்தில் பீடம் அமைக்கலாம் என ஆலோசனை கூறினார். ஆரணி நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். இதன்பிறகு கோவிந்தசாமி யின் கனவில் தோன்றி இக்கோவிலுக்கு வேம்புலியம்மன் என பெயரிடுங்கள் என அருள்வாக்கு கூறியதாக கூறினார்.[1] இதன் காரணமாக வேம்புலியம்மன் பெயரிடப்பட்டு 1973 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 1974 ஆண்டு வினாயகர் நவகிரக சிலைகள் அமைக்கப்பட்டது. கோயிலை கட்டி 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோயிலை சீரமைத்து 1985 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்புகள்ஆரணி வேம்புலியம்மன் கோயில் வருடாந்தோறும் ஆடிமாதம் என்றாலே ஆரணி நகரம் முழுவதும் கலைக்கட்டத் தொடங்கி விடும்.
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia