ஆர். வி. ஜானகிராமன்
ஆர். வி. ஜானகிராமன் (R. V. Janakiraman, 08 சனவரி 1941 - 10 சூன் 2019) என்பவர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி மாநில முதலமைச்சராக மே 26, 1996 முதல் மார்ச் 18, 2000 வரை பணியாற்றினார். இவர் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில், ஏழு முறை போட்டியிட்டு, ஐந்து முறை புதுச்சேரி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] வாழ்க்கை வரலாறுஇவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த ஆலந்தூரில் 1941 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கருணாநிதியிடம் பணிக்கு சேர்ந்தார்.[2] இதைத் தொடர்ந்து 1985இல் நெல்லித்தோப்புத் தொகுதியில் போட்டியிட்டு, வென்று முதன்முறையாக புதுச்சேரி சட்டமன்றத்தில் நுழைந்தார். 1988இல் புதுச்சேரி மாநில திமுக பொருளாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1990இல் பொதுப்பணித் துறை அமைச்சரானார். பின்னர் 1996 முதல் 2000வரை புதுச்சேரி மாநில முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். மேலும் இவர் சட்டப்பேரவை கொறடா, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர், மாநில திமுக அமைப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.[3] போட்டியிட்ட தேர்தல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia