மரக்காணம்
மரக்காணம் (ஆங்கிலம்:Marakkanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வட்டம் மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். மரக்காணம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்மாவட்டத் தலைமையிடமான விழுப்புரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த மரக்காணம் பேரூராட்சிக்கு கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் திண்டிவனம் 40 கி.மீ.; வடக்கில் சென்னை 123 கி.மீ. மற்றும் தெற்கில் பாண்டிச்சேரி 38 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு37.12 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 74 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,286 வீடுகளும், 22,034 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.[4] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14 மீட்டர் (45 அடி) உயரத்தில் இருக்கின்றது. மரக்காணத்தின் தபால் தலை குறியீடு எண்: 604303. மேலும் பார்க்க
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia