ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய்
ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் (Ashish Jitendra Desai; பிறப்பு: ஜூலை 5,1962) ஓர் இந்திய நீதிபதி ஆவார்.[1] இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.[2] இதற்கு முன்பு குசராத்து உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.[3][4] தொழில் வாழ்க்கைநீதிபதி தேசாய் அகமதாபாத்திலுள்ள புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், அகமதாபாத்தின் சர் எல். ஏ. ஷா சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றார். ஆரம்பத்தில், எம். சி. பட் மற்றும் டி. எம். பட் ஆகியோரின் சட்ட அலுவலகத்தில் பணியாற்றினார். முதலில் அகமதாபாத்தில் உள்ள நகர பொது மற்றும் அமர்வு நீதிமன்றத்திலும், பின்னர் குசராத்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டில் குசராத்து உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட தேசாய், 2013 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.[5][6][7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia