இதயம் (திரைப்படம்)
இதயம் (ⓘ) 1991ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதுவே இயக்குநர் கதிர் இயக்கிய முதல் திரைப்படமாகும். முரளியும் ஹீராவும் நடித்த இக்காதல் திரைப்படம் 1990களின் ஒரு மிகச்சிறந்த வெற்றிப்படமாகவும், பின்னர் வந்த காதல்கருத் திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தது.[1][2][3] கதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. கிராமத்திலிருந்து சென்னை வந்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முரளி, தன்னுடன் படிக்கும் ஹீராவைக் காதலிக்கிறார். ஆனால் தனது தாழ்வு மனப்பான்மையாலும் கூச்ச இயல்பாலும் அதை அவரிடம் சொல்ல முடிவதில்லை. இப்பின்னணியில் அவர் ஹீராவிடம் காதலைச் சொல்ல முயலும் பல காட்சிகள் இப்படத்தில் குறிப்பிடத்தக்கன. பின்னர் ஹீரா வேறொருவரைக் காதலிக்கிறார் என்று தவறாக நினைக்கிறார், ஆனால் உண்மையில் ஹீரா தன் உடன்பிறந்தவரையும் அவரது காதலனையும் இணைக்கவே உதவி செய்கிறார். படிப்பை முடித்துச் செல்லும்வரை தன் காதலை அவர் சொல்வதில்லை. இறுதியாக ஹீரா இவரது காதலைப் புரிந்துகொள்ளவரும்போது முரளிக்கு இதயநோய் இருப்பதாக கண்டறியப்படுவதோடு அவரால் எந்தவொரு மகிழ்செய்தியையோ துயரச்செய்தியையோ தாங்கமுடியாது என்பதும் தெரியவருவதால் கதையில் திருப்பம் ஏற்படுகிறது. இசைஇப்படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் இளையராஜா அமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலியும் பிறைசூடனும் எழுதியுள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரும் வெற்றிப்பாடல்கள் ஆகும்.
மேலும் இப்படம் அதன் கதையோடு ஒத்திசையும் அருமையான பின்னணி இசைக்காக பெயர்பெற்றது. துணுக்குகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia