இந்தியக் காவல் பணி
![]() இந்தியக் காவல் பணி (Indian Police Service), பொதுவாக இந்தியக் காவல் என்று அழைக்கப்படும் (அ) இ.கா.ப அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, மக்களின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய வனப் பணி ஆகும். 1947 இல் இந்தியா பிரித்தானியரிடமிருந்து விடுதலைப் பெற்ற பிறகு 1948 இல் பேரரசுக் காவல் என்றிருந்தப் பெயர் இந்தியக் காவல் பணி (இ.கா.ப) என்று பெயர் மாற்றம் கண்டது. காவல் நிலையம்காவல் நிலையம் குறிப்பிட்ட பகுதியின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் காவல் ஆய்வாளரின் தலைமையில் இயங்குகிறது. காவல் ஆய்வாளர்க்கு பணியில் உதவிட உதவி காவல் ஆய்வாளர்களும், காவலர்களும் செயல்படுகின்றனர். ஒரு காவல் நிலையத்தின் அதிகார எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் காவலர்களுக்கான துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய தோட்டாக்களை வைத்துப் பாதுகாப்பதற்கான அறையும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்திற்கு இடமானவர்களை அடைத்து விசாரணை செய்ய சிறு அறைகளும் கொண்டுள்ளது. காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளை பதிவு செய்த பொதுமக்களுக்கு உடனுக்குடன் முதல் தகவல் அறிக்கை வழங்கப்படுகிறது. தமிழ்நாடுதமிழ்நாட்டு காவல் நிலையங்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் அறிவிப்பு பலகைகள் மற்றும் காவல் நிலையங்களின் சுற்றுச்சுவர்கள் குறிப்பிட்ட நிறங்களில் எழுதப்பட்டு, வர்ணம் பூசப்பட்டிருக்கும். ஒடிசாஒடிசாவின் துணை மாவட்ட நிர்வாக அலகாக காவல் நிலையங்கள் உள்ளது. தேர்வு மற்றும் பயிற்சிகள்ஒருவர் இந்திய காவல் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் குடியியல் பணி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்திய ஆட்சிப் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி மைய அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது). தேர்வு நிலைகள்
தேர்வு நடைமுறை
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia