இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC), ஆசியாவையும், ஐரோப்பாவையும்மத்திய கிழக்கு மற்றும் மத்தியத் தரைக்கடல் வழியாக இணைக்கும் பொருளாதார வழித்தடம் ஆகும்.[1] இத்திட்டத்தை 2023ல் முதன்முதலில் இந்தியா முன்மொழிந்தது.[2]
9 மற்றும் 09 செப்டம்பர் 2023 அன்று புது தில்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், இரயில், சாலை வழியாக இணைக்கும் 6,000 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பொருளாதார வழித்தடத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் 10 செப்டம்பர் 2023 அன்று கையெழுத்திட்டது.[3][4][5]
புதிய பொருளாதார வழித்தடத்தில் இருபுறமும் மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்படும். அதோடு ஹைட்ரஜன் கொண்டு செல்ல இராட்சத குழாய்களும் பதிக்கப்படும். இந்த திட்டத்தால் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பியநாடுகளின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி அடையும். இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.[6]