இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501
இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 (Indonesia AirAsia Flight 8501, QZ8501/AWQ8501) என்பது இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் 155 பயணிகள் மற்றும் 7 பணிக்குழுவினரோடு[6] 2014 திசம்பர் 28 இல் காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் ஆகும்.[7] இரண்டு நாட்களின் பின்னர் டிச்ம்பர் 30 அன்று விமானத்தின் சிதைந்த பாகங்கள் சாவகக் கடலில் கரிமட்டா நீரிணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்தது 40 உடல்கள் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டன.[8] விமானம் கிளம்பிய 45 நிமிடங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், வழக்கத்தை விட அதிக உயரத்தில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[9] 29 டிசம்பர் அன்று மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்ததாக இந்தோனேசியா அறிவித்தது.[10][11] இந்தோனேசியா ஏர்ஏசியா என்பது மலேசியாவின் குறைந்த-கட்டண விமானசேவையான ஏர்ஏசியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டில் ஏற்கனவே மலேசியா ஏர்லைன்சின் மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370, 239 பேருடன் காணாமல் போனது, மலேசியா ஏர்லைன்சு 17 விமானம் 298 பேருடன் விபத்துக்குள்ளாகியது.[12] காணாமல் போன விவரங்கள்விமானத்தின் காலக்கெடு
பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்
விமானத்தில் பயணித்தவர்களில் 145 பெரியவர்கள் 16 குழந்தைகள் மற்றும் 1 கைக்குழந்தை என மொத்தம் 162 பயணிகள் பயணித்ததாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.[17] தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்தேடுதல் பணிகள்தேடுதல் பணியில் இந்தோனேசியா நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும், மலேசிய நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் விமானம் ஒன்றும் ஈடுபட்டு வருகிறது. மேலும் இப்பணியில் உதவ ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்வந்துள்ளன. டிசம்பர் 28, 2014 அன்று தேடுதல் வெளிச்சமின்மையால் மாலையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அடுத்த நாள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. விமானம்காணமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் 37.57 மீட்டர் நீளமும் 34.10 மீட்டர் அகலமும் உடையது. இவ்விமானத்தின் விமானி இரியாண்டோ (Irainto) 20,537 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். மேலும் அவர் இந்தோனேசியாவின் ஏரேசியா ஏர்பஸ் ஏ320-200 வகை விமானத்தை 6,100 மணி நேரம் ஓட்டிய அனுபவம் உடையவர். துணை விமானி பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2275 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 விமானம் கடைசியாக 2014, நவம்பர் 16 அன்று வழக்கமான திட்டமிடப்பட்ட கண்காணிப்பு மற்றும் பழுது நீக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானம் ஆறு வயதிற்கும் சற்று அதிகமானது ஆகும். விபத்துகாணாமல் போன ஏர் ஏசியா விமானம் விபத்திற்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டது. இவ்விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.[18] இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.[18][19] குறிப்புகள்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia