இயேசுவின் விருத்த சேதன விழா![]()
இயேசுவின் விருத்த சேதன விழா என்பது இயேசு கிறித்துவுக்கு யூத மரபுப் படி பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டு இயேசு என்னும் பெயரிடப்பட்ட நாளினை நினைவு கூறும் விதமாக கொண்டாடும் ஒரு கிறித்தவ விழாவாகும்.[1][2] தங்க மரபு (Golden Legend) என்னும் 14ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த கதைகளில் இந்த நிகழ்வு இயேசு முதன் முதலில் இரத்தம் சிந்தி மனுகுலத்தின் மீட்பு செயலை துவங்கியதற்காக முக்கியத்துவம் பெறுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவ்விழா சனவரி 1 அன்று கொண்டாடப்படுகிறது..[3] தற்போது சில ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பெரும்பான்மையான லூதரனிய சபைகள் இவ்விழாவை கொண்டாடுகின்றனர். 1960க்கு முன் இருந்த கத்தோலிக்கத் திருச்சபையின் நாட்காட்டியில் இவ்விழா இடம்பெற்றிருந்தது.[4] அதன்பின் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் என்னும் பெயரின் கத்தோலிக்க திருச்சபை, 2 பெப்ரவரியில் இவ்விழாவை சிறப்பிக்கின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia