இரண்டாம் செயவர்மன்
செயவர்மன் II அல்லது இரண்டாம் செயவர்மன் (Jayavarman II)[1] (ஆட்சி சுமார். 802-850) கம்போடியா / கம்போஜ பால வம்சத்தின் 9-ஆம் நூற்றாண்டின் மன்னனாவான். கி.பி 1802 இல் அங்கோரியக் காலம் தொடங்கியுள்ளது. அப்பொழுது கெமர் இந்துமத மன்னன் இரண்டாம் செயவர்மன் தானே உலகளாவிய மன்னன் என்றும் மன்னர்களுக்கெல்லாம் தானே கடவுள் என்றும் அறிவித்து 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1351 ஆம் ஆண்டு அயூத்தியா இராச்சியம் தலையெடுக்கும் வரை ஆட்சி புரிந்துள்ளார். 15-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தென்கிழக்கு ஆசிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய கெமர் பேரரசின் நிறுவனராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டான். இவன் ஒரு சக்திவாய்ந்த கெமர் மன்னராக இருந்தான். இவன் "யாவா" என்ற அறியப்படும் கல்வெட்டுகளில் இருந்து சுதந்திரமாக ஆட்சி செய்ததாக அறிய வருகிறது. இவனது ஆட்சிக்காலம் கிபி 802 முதல் கிபி 835 வரை இயங்கியதாக வரலாற்றாசிரியர்கள் முன்னர் தேதியிட்டனர். [2] இவன் மகேந்திர பர்வதம், இந்திரபுரம் (கெமர்), அமரேந்திரபுரம், அரிகராலயா போன்ற பல தலைநகரங்களை நிறுவினான். இவன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கம்போடியாவின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த உள்ளூர் மேலாதிக்கங்களுக்கு இடையே நிறைய சண்டைகள் நடந்தன. ஒரு ஆட்சியாளரின் கீழ் நாடு ஒருங்கிணைக்கப்படவில்லை. இவனது கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. கெமர் பேரரசின் வருங்கால மன்னர்கள் இவனை ஒரு போர்வீரன் என்றும், அந்தக் காலகட்டத்திலிருந்து அவர்கள் நினைவுகூரக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த அரசன் என்றும் வர்ணித்தனர். [3] மரணத்திற்குப் பிந்தைய பெயர்இரண்டாம் செயவர்மன் கிபி 850 இல் இறந்தான். [4] :59 மரணத்திற்குப் பிறகு பரமேசுவரன் என்ற பெயரைப் பெற்றான். [5] :103"இவனுக்குப் பிறகு, இவனது மகன் மூன்றாம் செயவர்மன் ஆட்சிக்கு வந்தான். மேலும், இவன் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மற்ற இரண்டு இந்திரவர்மனால் கட்டப்பட்டு கி.பி 880இல் திறக்கப்பட்ட ரௌலசில் உள்ள பிராசாதப்ர கோ கோவிலில் இந்த இரண்டு மன்னர்களும் அவர்களது மனைவிகளுடன் முறைப்படி கௌரவிக்கப்பட்டான். சான்றுகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia