கம்போடிய இராசலட்சுமி
கம்போடிய இராசலட்சுமி அல்லது கம்போஜ இராஜலட்சுமி எனும் மகாராணி இராசலட்சுமி (ஆங்கிலம்: Kambuja Raja Lakshmi அல்லது Queen Kambuja Raja Lakshmi; கெமர்: កំបុជរាចាឡាកស្មី; தாய் மொழி: กัมพุชราชลักษมี) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) சிரேத்தபுரம் (Shreshthapura) எனும் நிலப்பகுதியை ஆட்சி செய்த ஒரு புகழ்பெற்ற இராணி ஆவார்.[1] மகாராணி கம்போடிய இராசலட்சுமி, கி.பி. 575 முதல் கி.பி. 580 வரை சென்லா இராச்சியத்தை ஆட்சி செய்தவர். இவரின் ஆட்சிக் காலத்தின் பெருமைகள் கம்போடியாவின் புராணக் கதைகளிலும் சித்தரிக்கப் படுகின்றன.[2] பொதுசென்லா இராச்சியத்தின் மன்னன் சிரேத்தவர்மனின் (King Sreshthavarman) மகளான கம்போடிய இராசலட்சுமி ஓர் இளவரசி ஆவார். மன்னன் சிரேத்தவர்மன் சிரேத்தபுரத்தின் (Shreshthapura) மன்னனாகவும் அறியப் படுகிறார்.[3] கம்போடிய இராசலட்சுமி, அவரின் தாயாரின் வழியாக சென்லா அரச வம்சத்தின் பழைமையான வம்சாவளியைச் சேர்ந்தவர். 575-ஆம் ஆண்டில் கம்போடிய இராசலட்சுமி வீர வர்மன் மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்.[2][4] முதலாம் பவவர்மன்கம்போடிய இராசலட்சுமிக்குப் பிறகு அவரின் கணவர் முதலாம் பவவர்மன் (Bhavavarman I) அரியணை ஏறினார். இருப்பினும், கம்போடிய இராசலட்சுமியின் ஆட்சிக்கான சமகால சான்றுகள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.[4] சான்றுகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia