இராஜகிரி கரைமேல் அழகர் மற்றும் அய்யனார் கோயில்
இராஜகிரி கரைமேல் அழகர் ஐயனார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், இராஜகிரி என்னும் ஊரில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஐயனார் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சோழர் காலத்தில் இவ்வூர் இராஜகேசரி சதுர்வேத மங்கலம் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலில் உள்ள ஐயனார் சிவவிஷ்ணு அவதாரம் கொண்டுள்ளார்கள். (தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இராஜகிரியில் அமைந்துள்ள) கரைமேல் அழகர் ஐயனார் ஆலயத்தில் மதிற்சுவரை ஒட்டி கரைமேல் அழகர் அய்யனாரும், உள்ளே பூரணம், பொற்கொடியுடன் மூலவராக யானை மேல் அழகர் அய்யனாரும், பிராகாரத்தில் பரிமேல் அழகர் அய்யனாரும் அருள்பாலித்து வருகிறார்கள். ...இந்திராணி சிவலோகம் செல்ல இயலாத நிலையில் தனியே இருக்க அஞ்சினாள். இந்திரன் அவளுக்கு தைரியம் சொல்லி, சிவன்-திருமால் அம்சமாகப் பிறந்த ஹரிகர புத்திரன் அய்யனாரை வணங்கித் துதித்தார்.. ஐயனார் கோடி சூரியப் பிரகாசத்துடன் வெள்ளை யானை மேல், பூரணை, பொற்கொடி உடனுறை காட்சி அளித்தார். [சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் யானைமேல் அழகர் ஐயனார், பூரணம், பொற்கொடியுடன் சன்னதிகளும், கரைமேல் அழகர் ஐயனார், பரிமேல் அழகர் ஐயனார், விநாயகர், பேச்சியம்மன், மதுரைவீரன், பொம்மி, வெள்ளையம்மாள், யானைமேல் அழகர், செவ்வந்தி அம்மன், தெட்சிணாமூர்த்தி, சிவலிங்கம், முருகர், திருமால், கஜலெட்சுமி, ஆஞ்சநேயர், நாகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதம், நவராத்திரி, தனுர்மாதம், பிரமோற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia