இருக்குவேள் அரசர்கள்இருக்குவேள் அரசர்கள் அல்லது இருக்குவேளிர் (பொ.பி. 435 - 765) என்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்த குறுநில அரச வம்சத்துள் ஒரு வம்சத்தவராவர். இவர் களப்பிரர் காலத்தில் அவர்களின் கீழும், பல்லவர் காலத்தில் அவர்களின் கீழும், சோழர் காலத்தில் அவர்களுக்கு கீழுமிருந்து அரசாண்டவர்கள். இவர்கள் கொடும்பாளூர் என்னும் நகரை தலைநகராகக் கொண்டு அரசாண்டனர். இக்கொடும்பாளூர் சங்ககாலத்தில் மிழலைக் கூற்றம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கள்ளர் மரபினை சேர்ந்தவர்களாக, க. அ. நீலகண்ட சாத்திரி அவரகள் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகிறார்.[1] இருக்குவேளிர் யதுவம்சகேது எனப் பட்டம் புனைந்தவர்களாயினும் அவர்கள் கள்ளர் மரபிற்குரியவர்கள் என்பதைத் திருப்பழனக் கல்வெட்டு மூலம் திரு. வே. மகாதேவன் எடுத்துக் காட்டியுள்ளார். “இருங்கோவேள்' என்ற பட்டம் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் வாழும் கள்ளர் இனமக்களின் ஒரு பிரிவினரின் பட்டப் பெயராக இன்றளவும் உள்ளது.[2] ஆய்வுகள்இம்மன்னர்களை பற்றிய நிறைய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இருக்குவேள் அரசர்களின் பட்டியல்மேற்குறிப்பிட்ட மூவர் கோவில் சாசனம் படி 11 இருக்குவேள் அரச்ர்களின் பட்டியல் ஆரோக்கியசாமி என்பவரால் வெளியிடப்பட்டது. அவை,
இப்பட்டியலில் முதல் ஐந்து இருக்குவேளர்கள் களப்பிரர் மன்னர்களுக்கு ஆதரவாகவும், அடுத்து மும்மூன்று மன்னர்கள் முறையே பல்லவர் மற்றும் சோழர் மன்னர்களுக்கு ஆதரவாகவும் இருந்தனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia