இறச்சகுளம்
இறச்சகுளம் (ஆங்கிலம்: Erachakulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இறச்சகுளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°13′45″N 77°25′50″E / 8.229100°N 77.430600°E (அதாவது, 8°13'44.8"N, 77°25'50.2"E) ஆகும். நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, புத்தேரி, திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி ஆகியவை இறச்சகுளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். இறச்சகுளம் பகுதியில் அமிர்தா கல்வி நிறுவனங்களின் ஓர் அலகான அமிர்தா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது.[4] இறச்சகுளம் பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள், அப்பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள இயலாக் குழந்தைகளின் நலனுக்காக மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[5] இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.[6] மேலும், உதய மார்த்தாண்டேஸ்வரர் கோயில், முப்பிடாதியம்மன் கோயில், அழகிய மன்னார்சாமி கோயில் ஆகியவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும். மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia