இலக்கண நூல்கள்இலக்கணம் என்பது தமிழில் மொழிப்பாங்கை உணர்த்தும் நூல். ஒரு வகையில் மொழியியல் என்னும், தமிழியல் என்றும் கூறத்தக்கவை. இன்று தமிழில் கிடைத்துள்ள பழமையான முழுமையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் என்ப, என்மனார் புலவர் முதலான தொடர்களால் அதற்கு முன்பே இருந்த தமிழ் இலக்கண நூல்கள் சுட்டப்பட்டுள்ளன. தமிழில் உள்ள இலக்கண நூல்களைத் தொகுப்பிலக்கண நூல்கள், தனியிலக்கண நூல்கள் எனவும் பாகுபடுத்திக் காணமுடிகிறது. இந்த வகையில் அமைந்துள்ள இலக்கண நூல்கள் தமிழ் இலக்கண நூல்கள் என்னும் தலைப்பில் தனி நூலாக வெளிவந்துள்ளது. [1] அன்றியும் மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்களும், சில பால்கள் மட்டும் உரைநூல்களில் கிடைக்கப்பெற்றுத் தொகுக்கப்பட்டுள்ள இலக்கண நூல்களும் உள்ளன. தொகுப்பிலக்கண நூல்கள்எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பிரபந்தம், புலமை என்றெல்லாம் பாகுபடுத்திக்கொண்டு தமிழ் இலக்கண நெறி விரிந்துள்ளது. இவற்றில் சில பகுதிகளைத் தொகுத்துக் கூறும் இலக்கண நூல்களைத் தொகுப்பிலக்கண நூல்கள் என்று வகைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
தனி-இலக்கண நூல்கள்தமிழ் மொழியின் இலக்கணப் பகுதிகளில் ஒரே ஒரு இலக்கணப் பகுதியை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள் தனித்தனியே தோன்றியுள்ளன.
சிதைந்த இலக்கண நூல்கள்முழுமையாகக் கிடைக்காத நூல்களைச் சிதைந்த இலக்கண நூல்கள் என்று இங்குக் குறிப்பிடுகிறோம். பிற இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் உரையோடு தொடர்புடைய சில இலக்கண நூற்பாக்களை நூலின் பெயருடன் ஆங்காங்கே குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். பிற்கால அறிஞர்கள் அவற்றை ஒன்று திரட்டி உரிய நூலின் பெயரைத் தலைப்பாக்கி அவற்றை நூலாக்கிக் காட்டியுள்ளனர். இவை சிதைந்த இலக்கண நூல்கள்
மறைந்த தமிழ் இலக்கண நூல்கள்அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia