புறப்பொருள் வெண்பாமாலைபுறப்பொருள் வெண்பாமாலை (ஆங்கிலம்: Purapporul Venbamaalai) என்பது தமிழ் இலக்கணம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரு பொருளிலக்கண வகைகளுள் புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இதன் காலம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு ஆகும். உரைதருநூல்இஃது ஓர் உரைதருநூல். இதில் இலக்கணம் கூறும் நூற்பா 'கொளு' என்னும் தலைப்பில் அளவு ஒத்த இரண்டடிப் பாடலாக உள்ளது. இந்த இலக்கணத்துக்கு மேற்கோளாக ஆசிரியரே இயற்றிய வெண்பா, அல்லது ஆசிரியப்பா தரப்பட்டுள்ளது. தொல்காப்பியத்துக்குப் பின்தொல்காப்பியத்துக்குப் பின் புறப்பொருள் இலக்கணம் பற்றி எழுதப்பட்ட ஒரே நூல் இஃதெனக் கூறப்படுகிறது. வெண்பாமாலைபுறத்திணை பன்னிரண்டும் புறம், புறப்புறம் (வாகை, பாடாண், பொதுவியல்) , அகப்புறம் (கைக்கிளை, பெருந்திணை) என மூன்று வகையாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 342 கொளுக்கள் 341 துறைகள் (19+13+20+21+8+28+23+32+47+37+18+36+ஒழிபு 18) காணப்படுகின்றன. அத்துறைகளை விளக்க நூலாசிரியர் 361 எடுத்துக்காட்டு பாடல்களைக் கையாண்டுள்ளார். அவற்றில் கைக்கிளைத் திணை நீங்கலாக ஏனைய திணைகள் அனைத்திலும் காணப்படும் எடுத்துக்காட்டுப் பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்திருக்கின்றன. பாடல்களில் பெரும்பான்மை வெண்பாக்கள். எனவே இதனை வெண்பாமாலை என்று அழைக்கலாயினர். பிற்கால உரையாசிரியர்கள் மேற்கோள்புறப்பொருள் விளக்கும் நூல்கள் அரிதாக இருந்ததினாலோ என்னவோ, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர், மற்றும் நச்சினார்க்கினியர் போன்ற பிற்காலத்து உரையாசிரியர்கள் புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்து பெருமளவு பாடல்களை மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளனர். பயில்வோர்நன்னூல் எழுத்து, சொல் இலக்கணங்களைக் கூறுகிறது. இதனைப் பயின்றபின் தொல்காப்பியத்திலுள்ள எழுத்தும் சொல்லும் பயிலப்படுகிறது. அதுபோலத் தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரத்தைப் பயில்வதற்கு முன் அகத்திணை இலக்கணத்துக்கு நம்பியகப்பொருள் நூலையும், புறத்திணை இலக்கணத்துக்கு இந்தப் புறப்பொருள் வெண்பாமாலை நூலையும் பயிலச் செய்யும் பழக்கம் இருந்துவருகிறது. அகம், புறம்மக்களின் வாழ்வியலைத் தமிழ்நூல்கள் அகம், புறம் என இரண்டு நிலைகளில் பகுத்துப் பார்த்தன. அகம் என்பது திருமணத்துக்கு முந்தைய களவுநிலையிலும், திருமணத்துக்குப் பிந்திய கற்புநிலையிலும் நிகழும் ஆண்-பெண் உறவு பற்றியது. இது நெஞ்சகத்தில் வைத்து மறைக்கப்படும் வாழ்க்கை. புறம் என்பது புறத்தார்க்குப் புலனாகும் வாழ்க்கை. பாகுபாடுதொல்காப்பியர்,
எனப் பாகுபடுத்திக் காட்டினார். அந்தப் புறப்பொருளைப் புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளாகப் பகுத்துள்ளது. அந்த 12 திணைகளையும் அந்நூலின் ஆசிரியர் ஐயனாரிதனார் 3 பிரிவுகளாகப் பாகுபடுத்தி உள்ளார். அவை,
என்பனவாகும். ஆசிரியர்புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார். இவரை ‘வானவர் மருமான் ஐயனாரிதனார்’ என்று இந்நூலின் பாயிரம் குறிப்பிடுகிறது. (மருமான் = மருமகன்) சேரநாட்டு ஐயப்பன் கோயில் ஐயனார் சங்ககாலத்தில் அயிரை எனப் போற்றப்பட்டதை இங்கு நினைவுபடுத்திக் கொண்டால் புலவர் பெயருக்கு விளக்கம் புரியும். செங்குட்டுவன் தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் பாடியதை எண்ணும்போது சேரர்-குடியின் தமிழ்த்தொண்டு புலனாகும். முந்துநூல்அகத்தியரின் மாணாக்கர் 12-பேர், 12-திணைகளுக்குரிய இலக்கணம் பாடித் தொகுத்ததாகச் சொல்லப்படும் நூல் பன்னிருபடலம், இந்தப் புறப்பொருள் வெண்பாமாலைக்கு முதல்நூல் என்றும் கருதப்படுகிறது. இந்நூலின் பகுப்புகள்
ஆகிய திணைகளின் அடிப்படையில் 12 படலங்களாகப் பகுத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையும் பல துறைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் துறைகளைத் தொகுத்துக் காட்டும் பாடல் ஒன்று ஒவ்வொரு திணைக்கும் உள்ளது. இதனைச் சூத்திரம் என்கின்றனர். இப்படி 19 சூத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையும் ஈரடி நூற்பா ஒன்றால் விளக்கப்படுகிறது. இதனை இதன் உரையாசிரியர் கொளு என்று குறிப்பிடுகிறார். (செய்தியைக் கொண்டது கொளுதானே?) இந்நூலில் 342 கொளுக்கள் உள்ளன. மேலும் ஒழிபு என்னும் தலைப்பின்கீழ் 19 வென்றி-துறைகள் உள்ளன. இந்நூலில் கைக்கிளைத் திணை பாடல்கள் மட்டும் மருட்பாவின் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜயங்கொண்ட சோழமண்டலத்து மேற்கானாட்டு மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயனார் எழுதியதாகச் சொல்லப்படும் உரை ஒன்று இந்நூலுக்கு உள்ளது. கிழார் என்பதால் இவர் உழவர் எனத் தெரிகிறது. ஒவ்வொரு கொளுவுக்கும் விளக்கம், அந்தத் துறையை விளக்கும் வெண்பா அல்லது ஆசிரியப்பா ஒன்று, அதற்கு உரை என்னும் பாங்கில் அந்த உரை அமைந்துள்ளது. நூலின் ஒழிபியலில் சேர்க்கப்பட்டுள்ள புதுமையான துறைகள்
நூல்நூலில் சொல்லப்படும் இலக்கணமும், மேற்கோள் பாடலும் எவ்வாறு உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டுகள் 1 கைக்கிளைப் படலம், பெண்பாற் கூற்று, நெஞ்சொடு மெலிதல், பாடல் எண் 304 அருஞ்சொல் வஞ்சி அல்லிருட் செலீஇய
மல்லாடு தோளான் அளியவாய் மாலிருட்கண்
2 வெட்சிப்படலம், விரிச்சி பாடல் எண் 4 வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு
எழுவணி சீறூர் இருள்மாலை முன்றில்
இதனையும் பார்க்கவும்உசாத்துணைசேரர் பரம்பரையினராகிய ஐயனாரிதனார் அருளிச்செய்த புறப்பொருள் வெண்பாமாலை மூலமும், சாமுண்டி தேவநாயனார் இயற்றிய உரையும், ஐந்தாம் பதிப்பு - 1942. |
Portal di Ensiklopedia Dunia