இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களை பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாசாரங்களையும் பேணி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த போதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அரசியல், சமூக பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
சாதிய அமைப்பே இலங்கையின் சமூக கட்டமைப்பின் சமூக அதிகார படிநிலையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டபொதும் நாட்டின் அரசியலிலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.
இலங்கையின் கருவளம்
பொதுவாக கருவளம் என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளன. அந்த அடிப்படையில். Hazel R. Barath (1992) என்பவரின் '“Population Geography”' என்ற நூலில் “பொதுவாக கருவளம் என்றபதம் சகல உயிர்வாழ் இனங்களும் தம்மை ஒத்த உயிர்களை தாங்கி அவற்றை பிரசவிக்கின்ற திறமை. குறிப்பாக உயிருடன் நிகழ்கிகன்ற பிறப்புக்களின் உண்மைச் சம்பவம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே தோம்ஸன் மற்றும் லூயிஸ் என்ற அறிஞர்கள் “பொதுவாக ஒருதொகுதிப் பெண்களினது உண்மையான மீள் இனப்பெருக்க நிறைவேற்றத்தினைக் குறித்து நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இலங்கையின் கருவள நிலை
வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளில் தெற்காசியாக் கருவளப் போக்கு சற்று வித்தியாசமானது அதிலும் இலங்கை சமூகக்குறிகாட்டிகள் பலவற்றில் விதிவிளக்குகளைக் கொண்டநாடாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக இலங்கையின்2006 ஆம் ஆண்டு தரவுகளின் படி எழுத்தறிவு வீதம் 97% பருமட்டான பிறப்பு வீதம் 11% பருமட்டான இறப்பு வீதம் 6% இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1% எனவே இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளில் இருந்து விலகியதொரு போக்கை கொண்டு காணப்படுகின்றது எனலாம். அதேவேளை இலங்கையின் கருவளப்போக்கு ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சிப் போக்கை காட்டி நிற்கின்றது. குறிப்பாக 1950களின் பிற்பாடு இதனை சிறப்பாக அவதானிக்கலாம். 1963ஆம் ஆண்டில் பெண் ஒருவருக்கு 5 பிறப்புகள் காணப்பட்டது. (De Silva W 1991) மொத்தக் கருவளவீதம் 1993ஆம் ஆண்டு 2.3 ஆக வீழ்ச்சி கண்டது. (குடிவரையியல் சுகாதார அளவீடு 1993) இதனைத் தொடர்ந்து 1995-2000 காலப்பகுதியில் 1.96ஆக வீழ்ச்சி கண்டது. (குடிவரையியல் சுகாதார அளவீடு 2000) 2006 ஆம் ஆண்டிலும் ஒரு தாயிக்கு 2 பிள்ளை என்ற விகிதத்திலே காணப்பட்டுள்ளது.(World Population Chart Sheet 2006) இலங்கையின் குடிக்கணிப்பானது முதன்முதலில் 1871 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு வரை ஒரு சிலகாலப்பகுதிகள் தவிர ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடிக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இலங்கையில் முதன்முதலாக கருவள அளவீடானது 1975 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. (Srilanka Fertility Survery 1975). எனவே கடந்த 3 தசாப்தமாக கருவளம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதால் இலங்கையின் கருவளப்போக்கின் வரலாற்றை அணுகக்கூடியதாக இருக்கின்றது.இந்தஅடிப்படையில் இலங்கையின் கருவள அளவீடுகளில் சிறந்த முறையான மொத்தக் கருவள வீதத்தை நோக்கின் 1953 ஆம் ஆண்டு தொடக்கம் 2005-2006 காலப்பகுதி வரையான கருவள வீழ்ச்சிப் போக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இலங்கையின் மொத்தக் கருவள வீதம்
வருடம் மொத்தக் கருவள வீதம்
(1953 – 2005 to 2006)
வருடம்
மொத்தக் கருவள வீதம்
1953
5.32
1963
5.33
1965
5.19
1966-1977
4.72
1970
4.45
1971
4.16
1971-1975
3.89
1975
3.6
1978
3.55
1976-1980
3.5
1981
3.45
1982-1987
2.82
1988-1993
2.26
1995-2000
1.96
2005-2006
2
மூலம்: Department of census and statistics 2002
World population data sheet 2006
மேலும் இந்த அட்டவணை மொத்தக்கருவளப் போக்கில் படிப்படியான ஒரு வீழ்ச்சிப் போக்கை காட்டி வந்துள்ளது. இன்றைய நிலையில் ஒரு தாயிக்கு 2 பிள்ளை என்ற நிலையில் இலங்கையின் மொத்தக் கருவளம் காணப்படுகின்றது.
இதே போனறு பருமட்டான முறையில் கருவள வீதத்தை எடுத்து நோக்கும் போது கருவளத்தின் போக்கு எவ்வாறு 1964-2006 வரையான காலப்பகுதியில் மாற்றம் பெற்றுள்ளது என்பதை நோக்கலாம். இதனடிப்படையில் பின்வரும் அட்டவணை இதனை தெளிவ படுத்துகின்றது.
பருமட்டான பிறப்பு வீதம் 1000 ற்கு
(1964 – 2006)
வருடம்
பருமட்டான பிறப்பு வீதம் 1000 க்கு
1964
33.2
1969
27.5
1974
27.5
1979
28.9
1984
25.1
1989
21.6
1994
20.8
1999
17.3
2000
17.6
2001
18.9
2002
19.1
2003
18.9
2004
18.5
2005
19.7
2006
19.9
மூலம்: Registrar Generals Department 2007.
இதன்படி பருமட்டான பிறப்பு வீதமானது 1964 ஆம் ஆண்டிலிருந்து நோக்கும் போது படிப்படியான குறைவைக் காட்டினாலும் 2001 ஆம் ஆண்டிலிருந்து சற்று அதிகரித்த போக்கைக் காட்டி நிற்பதை அவதானிக்கலாம்.
குறிப்பாக மொத்தக் கருவளவீதம் பருமட்டான பிறப்பு வீதம் என்பனவற்றில் கருவளதிடீர் வீழ்ச்சியையம் சிலகாலம் தளம்பளில் உயர்வையம் காட்டி நிற்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கருவளத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஏற்பட்ட தாக்கம் ஆகும். இதன்படி 1955-1975 காலப்பகுதியில் கருவளவீழ்ச்சிக்கான காரணங்களில் தாமதமான திருமணங்கள் பிரதான காரணியாக குறிப்பிடத்தக்கது. (Wright 1968) றைற் என்பவர் குறிப்பிடுகையில் “பெண்களின் திருமண அந்தஸ்து அவர்களின் திருமண வயதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன இக்காலப்பகுதியில் கருவள வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில் 1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சியம் கருவள வீழ்ச்சிக்கு காரணமாக அமையலாயிற்று. இலங்கையில் 1953 ஆம் ஆண்டில் குடும்பத்திட்டச்சங்கம் ஆரம்பித்து 1965 ஆம் ஆண்டு வரையில் அதன் நிகழ்ச்சித்திட்டச் செயற்பாடுகள் பெரும்பாலும் நடைமுறையில் இடம் பெறவில்லை. 1965 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 3 கட்டங்களாக விரிவாக்கம் பெற்ற இத்திட்டம் 1968 ஆம் ஆண்டின் போது நாடு முழுவதையம் உள்ளடக்கியதாக வியாபித்தது.
முடிவரை
இந்த அடிப்படையில் கருவளத்தைத் தீர்மானிப்பதில் பெண்களின் தொழில் அந்தஸ்து கல்விமட்டம் வருமானம் கலாசார மதநம்பிக்கை கணவர்மார் கல்வி தொழில் போன்ற காரணிகளும் கருவளத்தில் தாக்கம் செலுத்திAள்ளதை அவதானிக்கலாம். இது தொடர்பாக (Caldwell 1982) கோல்ட்வெல் என்பவர் “விருத்தி அடைந்த கல்வியால் கருவளமட்டம் குறைவடைந்துள்ளது கல்வி அறிவ திருமணவயதை பாதிக்கின்றது”. எனக்குறிப்பிட்டுள்ளதை அவதானிக்கலாம்.
இந்த அடிப்படையில் இலங்கையின் கருவளத்திலும் இவ்வாறான காரணிகளின் செல்வாக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனலாம். இலங்கை கருவளக் கட்டுப்பாடு தொடர்பான அழுத்தமான சட்டங்கள் இன்றுவரையில் கொண்டுவர வில்லை என்றாலும் கருவளத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. இந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில்கருவளம் ஒரு முறையான மெதுவான வளர்ச்சிப் போக்கை எடுத்துச் செல்ல வேண்டுமானால் அதற்கு நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவது அவசியமாகும். இதன்படி ஒரு நாட்டின் குடித்தொகை வளங்களை ஒத்துக் காணப்படும் போது அந்நாட்டின் அபிவிருத்திக்கும் அது வழிவகுக்கும் என்பது சந்தேகமில்லை.
உசாத்துணைகள்
Indralal da silva, (2007), Population Study: Based On Srilanka, Deapani (pvt) ltd, Srilanka.
↑ 1.01.12001 ஆம் மக்கள்தொகைக் கணிப்பீடு புலிகளின் கடடுப்பாட்டு பகுதிகளில்நடைபெறவில்லை. எனவே சில மாவட்டங்களிந் தகவால்கள் 1981 ஆண்டின் தகவல்களைக் கொண்டுள்ளன.
↑ 6.06.1Indian Tamils were only classified as a separate ethnic group from 1911 onwards. Prior to this they were included with Sri Lankan Tamils.
↑ 7.07.1Indian Moors were only classified as a separate ethnic group from 1911 to 1971. Prior to 1911 they were included with Sri Lankan Moors. After 1971 they were included with Others.
↑The 1941 Census was postponed due to World War II.
↑The 1951 Census was postponed due to a shortage of paper at the time.
↑ 10.010.12001 Census was only carried out in 18 of the 25 districts. Inclusion of data would be misleading.
↑The official census dates for the 2011 Census was 20 March 2012.