இலங்கையில் அரச சித்திரவதைஇலங்கை அரசு சித்திரவதையைப் பயன்படுத்துவதாக ஐநாடுகள் சபை உட்பட பல மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.[1] காவல்துறை, படைத்துறை ஆகிய இரண்டும் சித்திரவதையைப் பயன்படுத்துகின்றன. ஆசிய மனித உரிமைகள் மையத்தின் அறிக்கை (Torture and Lawless Law Enforcement in Sri Lanka) சித்திரவதை இலங்கைச் சட்டத்தின் அடிப்படை நிறுவனப்படுத்தப்பட்ட ஓர் அங்கம் என்று கூறுகிறது[2]. நான்காம் மாடி விசாரணைஇலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தீவிரவாத விசாரணைப் பிரிவு (TID – Terrorism Investigation Division) நடத்தும் விசாரணை, நான்காம் மாடி விசாரணை என ஊடகங்களால் குறிப்பிடப்படுகிறது[3]. கொழும்பு நகரில் குற்றவியல் விசாரணைத் துறையின் கட்டடம் அமைந்துள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் குற்றவியல் விசாரணைப் பிரிவும் (CID - Criminal Investigation Department), நான்காவது மாடியில் தீவிரவாத விசாரணைப் பிரிவும் செயல்படுகின்றன. தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு எதிரான போராட்டங்கள்
உசாத்துணை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia