இலங்கையில் கண்ணகி வழிபாடு![]() ![]() இலங்கையில் கண்ணகி வழிபாடு ஒரு தொன்மை வாய்ந்த நம்பிக்கை வெளிப்பாடாகும். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான சோழ நாட்டில் பிறந்த கண்ணகி பாண்டி நாட்டில் வீரக் கற்பரசியாகி, சேர நாட்டிலே பத்தினித் தெய்வம் எனப் போற்றப்பட்டு, இலங்கையிலே சிங்கள மக்கள் மத்தியில் பத்தினி தெய்யோ என வணங்கப்பட்டு, இலங்கை மட்டக்களப்பு பிராந்தியத்தில் கண்ணகை அம்மனாக கோவில்கள் கொண்டுள்ளாள். சிங்கள மக்கள் வழிபாடுஇரண்டாவது நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு[1] என்கிற மன்னனால் கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசனை கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தன் என சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது. கஜபாகு மன்னன் வருடந்தோறும் ஆடி மாதத்தில் பத்தினி தெய்வத்திற்கு விழா எடுப்பித்தான். சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும். அதிலிருந்து இந்த விழா எசல பெரஹர என அழைக்கப்பட்டது. (பிரகாரம் என்பதே பெரஹர எனத் திரிபடைந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.) ஊர்வலமாக வரும் ஆடித் திருவிழா என தமிழில் கூறலாம். இந்த ஊர்வலத்தில் நாத தெய்யோ (சிவன்/விநாயகர்), விஷ்ணு தெய்யோ (திருமால்), கதிர்காம தெய்யோ (முருகன்) தெய்வங்களும் இடம் பெற்றன. மிக பக்தியுடன் இந்த விழா சுமார் 1800 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சிங்கள மன்னர்கள் காலத்துக்குக் காலம் தலைநகரை மாற்றியபோது, பத்தினி விழாவும் அந்தந்த தலைநகரங்களில் நடைபெற்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் சீய நாட்டிலிருந்து (தாய்லாந்து) இலங்கைக்கு வந்த புத்த துறவிகளின் விருப்பப்படி விழாவில் புத்தரின் புனித தந்தம் தாங்கிய பேழையும் எடுத்துச் செல்லப்படலாயிற்று. தற்போது இந்த விழா சிங்கள மன்னர்களின் கடைசி தலைநகரமான கண்டி நகரில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது ஒரு புத்த சமய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் விழாவில் இரண்டாவது ஊர்வலம் நாத தெய்யோ ஆலயத்திலிருந்தும், மூன்றாவது ஊர்வலம் விஷ்ணு தெய்யோ ஆலயத்திலிருந்தும், நான்காவது ஊர்வலம் கதிர்காம தெய்யோ ஆலயத்திலிருந்தும், ஐந்தாவது ஊர்வலம் பத்தினி தெய்யோ ஆலயத்திலிருந்தும் தொடங்குகின்றன. இப்போது பத்தினி தெய்யோ தொற்று நோய்கள், பஞ்சம், வறட்சி ஆகியவற்றிலிருந்து காக்கும் தெய்வமாக சிங்கள மக்கள் மத்தியில் வருணிக்கப்படுகிறது.[2] தமிழ் மக்கள் வழிபாடுவடக்கு மாகாணம்இலங்கையில் வட மாகாணத்தில் வற்றாப்பளை என்னும் ஊரில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயம் புகழ் பெற்றது. இங்கே வைகாசி மாதத்தில் விழா நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் கச்சாய் என்னும் ஊரில் ஒரு கண்ணகை ஆலயம் இருப்பதாக ஒரு தகவல். புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தீவுப்பகுதியிலுள்ள ஒரு கண்ணகி வழிபாட்டுத்தலமாகும். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள, நல்லூர் எனும் ஊரில் ஓர் பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலயம் உள்ளது. இது, கண்ணகி ஓர் நாள் தங்கி ஓய்வு எடுத்த இடமாக ஆலய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. தவிர கண்ணகி வழிபாடு வட பகுதியில் வேறு இடங்களில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வடபகுதியிலிருந்த கண்ணகி ஆலயங்கள் பல, நாவலர் காலத்திலேற்பட்ட சைவ எழுச்சியை அடுத்து, வைதிக வழிபாட்டுக்குட்பட்ட அம்பிகை ஆலயங்களாக மாற்றப்பட்டமை வரலாறு. தமிழகத்தில் சேரன் செங்குட்டுவன் காலத்தில் சோழ, பாண்டி நாடுகளிலும் கண்ணகி கோவில்களும் வழிபாடும் எழுந்தன. கணவன் இறந்தான் எனக் கேள்வியுற்ற கண்ணகி ஒற்றைச் சிலம்புடன் பாண்டியனுடைய அரண்மனை வாயிலில் நின்றபோது வாயில் காவலர்கள் அவளது தோற்றத்தை கொற்றவை, காளி, துர்க்கை என நினைத்ததாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.[3] தமிழகத்திலும் கேரளத்திலுமுள்ள, மாரியம்மன் மற்றும் பகவதியம்மன் வழிபாடுகள், கண்ணகி வழிபாடு வைதிக வழிபாட்டுக்குள் உள்ளீர்க்கப்பட்டபின்னர் ஏற்பட்ட வழிபாட்டுமாற்றமாகவே இருக்கவேண்டும். கிழக்கிலங்கைஇலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதியில், மட்டக்களப்பு பகுதியிலேயே (மட்டு - அம்பாறை மாவட்டங்கள்) கண்ணகி வழிபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. இங்கு சைவக் கோவில்கள் பல இருக்கின்ற போதிலும் கண்ணகை அம்மன் கோவில்களே அதிக சிறப்புப் பெற்று விளங்குகின்றன. உடுகுச்சிந்து என்னும் நூலில் மட்டக்களப்பிலுள்ள கண்ணகி கோவில்கள் பற்றி தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் யாழ்ப்பாணத்தில் உள்ள அங்கணாமைக் கடவை கண்ணகி கோவில் பற்றியும் சில பாடல்கள் உள்ளன. இந்த நூலின் பாடல் ஒன்றில் "காமனகர் வாழ்குளக் கண்டியுறை மாதே" (பாடல் 63) எனக் கூறப்பட்டிருப்பதால் கண்டியிலுள்ள கண்ணகி கோவிலும் (பத்தினி தெய்யோ கோவில்) மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றிருந்ததென்று தெரிகிறது. கண்டிக்கும் மட்டக்களப்புக்கும் இடையே பண்டைய காலத்தில் வாணிபத் தொடர்பு இருந்தது. இதனால் இரு இடங்களையும் இணைக்கும் பழைய வீதி ஒன்று இருந்தது. இந்த வீதி மட்டக்களப்பிற்குத் தெற்கே உள்ள காரைதீவுவிலிருந்து, சம்மாந்துறை, வீரமுனை ஆகிய ஊர்களினூடாக கண்டிக்கு சென்றது. எனவே கண்ணகி வழிபாடு கண்டியிலிருந்து வீரமுனை வழியாக வந்து மட்டக்களப்பின் பிற ஊர்களுக்குப் பரவியது எனக் கொள்ளலாம். மட்டக்களப்பிலே 25 இற்கும் அதிகமான ஊர்களிலே கண்ணகை அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. வீரமுனை, காரைதீவு, தம்பிலுவில் ஆகிய ஊர்களில் கிடைக்கும் சில சான்றுகளால் கண்ணகி வழிபாடு அங்கிருந்தே மற்ற ஊர்களுக்கும் பரவியிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.[4][கு 1] உடுகுச்சிந்து நூலின் 71 ஆம் பாடல்
என்று ஊர்களைப் பட்டியலிட்டுக் கூறுகின்றது. மட்டக்களப்பு பகுதியில் கண்ணகை அம்மன் கோவில்களில் நடக்கும் திருவிழாவை சடங்கு என்று கூறுவது அங்குள்ள வழக்கம். வருடந்தோறும் வைகாசி மாத பூரணை நாளுக்கு முந்திய வளர்பிறை காலத்தில் (பூர்வ பட்சம்) விழா நடத்தப்படுகிறது.
கண்ணகி அம்மனின் கோபத்தினாலேயே வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக்கடுப்பு, மங்கமாரி, கண் நோய், பெருஞ்சுரம் போன்ற சூட்டு நோய்கள் பரவுகின்றன என மட்டக்களப்பு மக்கள் பலர் நம்புகின்றனர். காளி அம்மனின் அம்சமான கண்ணகையின் பரிகலங்கள் (அணுக்கத் தேவதைகள்) எண்மர் உளர் என்றும் அவர்களே இந்த நோய்களுக்குத் தலைவர்கள் என்றும் அங்கு கூறப்படுகிறது. வழக்குரை காவியம்
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமான வழக்குரை காவியம் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலை சேர்த்து வளர்த்துவரும் பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது. வழக்குரை காவியத்தில் கூறப்படும் கண்ணகி கதை இக்காலத்தில் சோழ நாட்டில் கரிகால் பெருவளத்தான் ஆட்சி செய்து வந்தான். சோழ நாட்டின் தலை நகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்துவான், மாநாய்கன் என்ற இரண்டு வணிகர்கள் வாழ்ந்தனர். மாசாத்துவானுக்கு கோவலன் என்றொரு மகன் இருந்தான். மாநாய்கனுக்கு குழந்தைப்பேறு இல்லாதிருந்தது. இருவரும் ஒரு நாள் கடற்கரையில் நிற்கும்போது குழந்தையுடன் பேழை வருவதைக் கண்டனர். மாநாய்கன் அக்குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டான். தன் வாழ்வில் ஒளியும் மகிழ்ச்சியும் ஏற்றிய காரணத்தால் குழந்தைக்கு கண்ணகை எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தான். இதன் பின்னர், வழக்குரை கதை பெருமளவு சிலம்புடன் ஒத்தும், சில இடங்களில் மாறுபட்டும் செல்கிறது. இராஜராஜ சோழன் தஞ்சையில் ஏற்படுத்திய கண்ணகி ஆலயம்பதினோராம் நூற்றாண்டில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றி சிங்கள மன்னனாகிய ஐந்தாவது மகிந்தனையும் அவனது மனைவியையும் சிறைபிடித்து வந்தான். அவர்கள் இருவரும் சகல மரியாதைகளுடன் ஒரு மாளிகையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். சிங்கள மன்னனின் மனைவி பத்தினி வழிபாடு இல்லாமையால் வருந்தினாள். பண்பும் கருணையும் மிகவும் உடையவனான இராஜராஜ சோழன் அவள் விருப்பப்படி கண்ணகி கோவில் அமைத்துக் கொடுத்ததோடு பத்தினி விழாவும் அங்கு நடைபெறச் செய்தான். அக்காலத்தில் சோழநாட்டில் பத்தினி வழிபாடு மறைந்து போயிருந்த காரணத்தால் தமிழக மக்கள் கண்ணகியை சிங்கள நாட்டிலிருந்து வந்த தெய்வமாகக் கருதி சிங்கள நாச்சி கோவில் என அக்கோவிலை அழைத்தனர். நாளடைவில் அப்பெயர் செங்களாச்சி என திரிபடைந்து[கு 2] பின்னர் சாதாரண மக்களால் செங்காச்சி அம்மன் என அழைக்கப்பட்டது. மேற்கோள்கள்
குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia