இலட்சுமி கெபால்கர்
இலட்சுமி இரவீந்திர கெபல்கர் (Lakshmi Ravindra Hebbalkar) என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கைஇலட்சுமி இரவீந்திர கெபல்கரை மணந்து பெலகாவி அனுமான் நகரில் வசிக்கிறார். இவருக்கு மிர்னல் கெபல்கர் என்ற ஒரு மகன் உள்ளார். அரசியல் வாழ்க்கைஇலட்சுமி கெபால்கர் 2013-ல் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியிலும் பின்னர் 2014-ல் பெலகாவி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் மே 2015-ல் கருநாடக மாநில மகளிர் காங்கிரசு தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] 2018ஆம் ஆண்டில், இவர் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் சஞ்சய் பி. பாட்டீலை தோற்கடித்து கருநாடக மாநிலச் சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக 2019 செப்டம்பரில் அமலாக்க இயக்குநகரத்தால் இரண்டு நாட்கள் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.[6] வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia