இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் ஒரு சமரச இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு போராட்ட இயக்கமாக செயல்பட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்த போராட்ட இயக்கமாக இருந்தது. அதன் பிறகு மகாத்மா காந்தி அவர்கள் இவ்வியக்கத்தை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நியாயமாக கலைத்துவிடலாம் என்று கூறிய போதும் கூட காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு தலையீட்டால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற போதிலும் சுதந்திர இந்தியாவில் 1947க்கு பிறகு 54 வருடமும் 7 பிரதமர்களையும் ஆள வைத்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் 58 வருடங்களும் 4 பிரதமர்களை ஆள வைத்து இந்தியாவை அதிக காலம் ஆண்ட ஒரே பெருமைக்குரிய அரசியல் கட்சியாக காங்கிரஸ் கட்சி இன்று வரை திகழ்ந்து வருகிறது. மேலும் இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.
வரலாறு
இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
விடுதலைக்கு முன்பான காலப் பகுதி
1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான்.ravi ram, karthi, lilee, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 திசம்பரில் நடந்த கூட்டத்தில் subash தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
இதன் இரண்டாம் கூட்டம் 1886 திசம்பர் 27-ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.
முன்றாவது மாநாடு சென்னையில் 1887 திசம்பர் 27-ல் நடைபெற்றது.
பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரசின் கொள்கையில் மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907 -ல் காங்கிரசில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரசு இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது. இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரசு கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை பட்டாபி சித்தராமையா எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார். உமேசு சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory"-யில் கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "ஆலன் ஆக்ட வின் ஹியூம் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.
காந்தியின் கால பகுதி
காந்தி 1915 ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் காந்தியின் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். திரும்பர் 1917ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக காந்தி ஓராண்டிற்குத் தெரிவானார்.
விடுதலைக்கு பிந்தைய காலப் பகுதி
இந்திரா காந்தி காலப் பகுதி
நேருவின் மறைவுக்குப் பின் இவர் லால் பகதூர் சாசுத்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராகப் பணியாற்றினார். லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் மறைவை ஒட்டிப் பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் கு. காமராசின் முயற்சியும் காரணமாகும். பின் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாகக் கூறி காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரிக் கொள்கையுடன் இருந்த அவர்கள் பொருளாதாரக் திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக இந்திரா காங்கிரஸ் ,எனவும் நிறுவன காங்கிரசு எனவும் பிரிந்தது.மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசியக் காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர்க் குழுவான நிறுவன காங்கிரசு தனி கட்சியானது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமைப் புரட்சி நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வங்காள தேசம் உருவாகக் காரணமாக இருந்தார். 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்றுப் பிரதமரான போதிலும் காங்கிரஸ் கட்சிக்குகம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல மாநில கட்சிகளின் ஆதரவு அளித்தனர்.
அரசாங்க அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொண்ட தவறான முறைகேடு செயல்களால். நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
ஆனால் அதை காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும் தலைவர்களும் அக்கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்த சில கட்சிகளும் இணைந்து பலமான எதிர்கட்சியான பாரதிய ஜன சங்கம், பாரதிய லோக் தளம் போன்ற கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஜனதா கட்சி என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கினார்.
1980 ஆம் ஆண்டு எதிர்கட்சியான ஜனதா கட்சியில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது.
பின்பு 1980 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக பிரதமரானார்.
ஆனால் அக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அவர்கள் முந்தைய ஆட்சி காலத்தில் வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்க்கு கிழக்கு பாகிஸ்தான் என்ற பங்களாதேஷ் தனிநாடு பெற்று கொடுத்ததை போல் பஞ்சாப் தனிநாடு சுதந்திரம் கேட்டு சீக்கியர்கள்காலிஸ்தான் அமைப்பை கொண்டு ஆயுதம் ஏந்திய போராடிய போராளிகள் இந்திரா காந்தி நோக்கி பஞ்சாப் தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் செய்தனர்.
ஆனால் பஞ்சாப் தனிநாடு கேட்டு போராடிய சில சீக்கிய போராளிகளை இந்திரா காந்தி வன்மையாக கண்டித்தார். சீக்கியர்களின் புனித வழிபாட்டு தலமான அமிர்தசரஸ் பொற்கோயில்க்குள் இந்திய ராணுவ படையை ஏவி சில காலிஸ்தான் போராளிகளை கொன்ற கோபத்தால்.
பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது.
இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.[5][6]
இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதையடுத்து.
ராஜ் நாராயணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி சார்பாக சரண் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதற்கு இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சரண் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். பிரதமர் சரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது.
இந்த கை சின்னம் ஆனது காங்கிரஸ் கட்சியின் பிரதான தேர்தல் சின்னமாக மாறியது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்றுள்ளது.[7]
கொள்கை மாற்றம்
காங்கிரஸ் கட்சிஇந்தியாவிற்கு அகிம்சா முறையில் சுதந்திரம் பெற்று கொடுத்த சோசலிசம் கட்சி என்று பார்த்தாலும் அதன் அடிப்படை கொள்கையானது இந்தியாவின் அடிப்படை மதமான இந்து மதம் சார்ந்த இந்து தேசியம் கொள்கை உடையது.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் நேருவின் மரணத்திற்கு பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு எதிராக பல செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும் வாரிசு அரசியல் சர்வதிகார போக்கில் இந்திரா காந்தி நடந்து கொண்டதால், காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு காமராஜர் தலைமையில் நிறுவன காங்கிரஸ் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரசு என்று செயல்பட்டபோது பிரதமர் இந்திரா காந்தி தனது கட்சியின் ஆட்சிக்கு பிற கட்சிகளின் ஆதரவு பலத்தை பெறுவதற்கு தனது கட்சியின் கொள்கைகளான சமூக மக்களாட்சி, பழமைவாதம், இந்து தேசியம் கொள்கை உடன் மதச்சார்பின்மை என்ற கொள்கையை சேர்த்து கொண்டு அன்றைய காங்கிரசின் பிரதான எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு அவ்வாறு இந்திரா காந்தி கொள்கை சமரசம் செய்து கொண்டார்.
அதனால் முதல் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் 10 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையோடு அம்மாநில மக்கள் வெற்றி பெற வைத்து சோனியா காந்தியை அன்னை பராசக்தியாகவும், மகாகாளி, துர்காதேவியாக போற்றி வணங்கி வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி அம்மாநில கட்சிகளுடன் கூட்டணியில் ஆட்சி செய்துவருகிறது.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதியில் 90 தொகுதிகளிலே தேர்தல் நடத்தப்பட்டு அதில் பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் மீதமுள்ள 24 சட்டமன்றத் தொகுதியானது பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருப்பதால் தற்போது அங்கு தேர்தல் நடத்தாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தற்போது பல மாநிலங்களில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், பிற மாநில கட்சிகளுக்கும் பலமான எதிர்கட்சியாக செயல்பட்டுவருகிறது.
இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெருபான்மையாக ஆட்சி புரிந்துள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இறுதி ஆட்சி காலத்தில் நடந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இந்திய அரசியலில் அதுவரை இல்லாத நாட்டின் பொருளாதார குறைப்பாடுகள் மற்றும் கூட்டணி ஆட்சி முறையால் பல நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு செயல்படுத்த முடியாமல் அந்த ஆட்சி காலத்தில் போனதால் இன்று தற்போது பல மாநிலங்களிலும் இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி பலமான பின்னடைவும், தேர்தல்களில் தொடர் தோல்வியும் அடைந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி தற்போது நேரடியாகவும் & கூட்டணியிலும் ஆளும் மாநிலங்கள் பட்டியல்
இம்மாநிலத்தில் மொத்தம் 114 சட்டமன்றத் தொகுதிகளில் மீதமுள்ள 24 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருப்பதால் அத்தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படாமல் தற்போது (காங் 6)/90
2004, 2009 இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் இருமுறையும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) தலைமையில் முதல் ஆட்சி காலத்தில் இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகள் ஆதரவிலும் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு
10–வருடம்
காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் பிரதமர்கள்
காங்கிரஸ் கட்சி சார்பில் 7 பிரதமர்கள் 54 வருடமும் அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் 3 கட்சிகளை சார்ந்த 4 பிரதமர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் தலா 1 வருடத்திற்கு மொத்தமாக 4 வருடம் ஆண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவுடன் சேர்த்து 58 வருடங்கள் இந்தியாவை ஆண்டுள்ளது.
(மேலும் இந்த பட்டியலில் உள்ள 4 பிரதமர்களும் மக்களால் நேரடியாக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படாமல் காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம் என இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகளின் ஆதரவு நிலைபாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் ஆவர்)