இலளிகம் சென்றாயசுவாமி கோயில்
![]() இலளிகம் சென்றாயசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், இலளிகம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.இக்கோவில் சிற்பங்கள் கி பி 12 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்க கூடும் என கல் வெட்டு துறை அறிஞர்கள் கூறுகின்றனர்.கருவறையில் உள்ள ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக சர்வாலங்கார கோலத்தில் கம்பீரமாக அமைந்துள்ளார்.இக் கோவில் 14 ஆம் நூற்றாண்டு இவ்வூர் வேட்டுவ தலைவர்களால் கட்டப்பட்டது என கூறுகின்றனர்.ராஜராஜன்,குலோத்துங்கன் போன்ற பேர்ரசர்கள் ராஜராஜேஸ்வரம் பென்னேஸ்வரம் போன்ற பெரும் கோவில்கள் கட்டிய காலத்தில் கட்டப்பட்ட மகா மண்டபமாகும் திருக்கோவில் சுற்று பிரகாரம் 1144 சதுர அடி மகா மண்டபம் அர்த்த மண்டபம் 212 சதுர அடி கர்பகிரகம் 244 சதுர அடி மொத்த கோவில் பரப்பளவு 2052 சதுர அடி கோயில் அமைப்புஇக்கோயிலில் சென்றாயசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், விநாயகர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia