இல. செ. கந்தசாமி
இல. செ. கந்தசாமி (L. S. Kandasamy) (திசம்பர் 24, 1939 – ஏப்ரல் 6, 1992), தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் இதழாளரும் ஆவார். இவர் தனது வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவராக உயர்ந்தவர். இவர் புதினங்கள், புதுக்கவிதைகள், தன்முன்னேற்ற நூல்கள், உழவு குறித்த நூல்களை எழுதியுள்ளார். பிறப்புஇல. செ. கந்தசாமி 1939 திசம்பர் 24 ஆம் நாள் இராசிபுரத்திற்கு அருகில் உள்ள இலக்கபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். கல்விகந்தசாமி பள்ளிக் கல்வியை தனது ஊரிலேயே பெற்றார். 1957 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்று தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றார். பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டே தனியே பயின்று கலை முதுவர் பட்டத்தில் பல்கலைக் கழக அளவில் முதன்மையானராகத் தேறினார். 1978 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காகப் பதிவு செய்தார். 1985 நவம்பர் 13 ஆம் நாள் முனைவர் பட்டம் பெற்றார். இல்லற வாழ்க்கைகமலம் என்பவரை கந்தசாமி 1967 ஆகத்து 21 ஆம் நாள் மணந்தார். பணிக்கள வாழ்க்கை1961ஆம் ஆண்டில் தமிழாசிரியராக உயர்நிலைப் பள்ளியொன்றில் பணியாற்றினார். 1972ஆம் ஆண்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார். எழுத்துப்பணி [1]
இதழாசிரியர்கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஏர் உழவன் என்னும் இதழின் ஆசிரியராக 1975ஆம் ஆண்டில் கந்தசாமி பொறுப்பேற்றார். பின்னர் வளரும் வேளாண்மை என்னும் இதழின் ஆசிரியப் பொறுப்பையும் ஏற்றார். 1988 ஆம் ஆண்டில் தன்முன்னேற்றத்தை வலியுறுத்தும் தன்னம்பிக்கை என்ற மாத இதழைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களும் நண்பர்களும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகின் வெளிநாட்டுப் பயணம்கந்தசாமி 1986ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு 40 நாள்கள் பயணமாகச் சென்று திரும்பினார். 1987 ஆம் ஆண்டில் தாய்லாந்து, ஆங்காங்கு, தென்கொரியா, சப்பான், பிலிப்பைன்சு, சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார். 1988 ஆம் ஆண்டில் ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று திரும்பினார். 1990 ஆம் ஆண்டில் இசுரேல், சோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார். மறைவுஇல. செ. கந்தசாமி 1992 ஏப்ரல் 6 ஆம் நாள் கோயமுத்தூரில் மரணமடைந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia