ஈசாந்திமங்கலம்
ஈசாந்திமங்கலம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 67.33 மீட்டர்கள் (220.9 அடி) உயரத்தில், (8°15′34″N 77°25′38″E / 8.2595°N 77.4271°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஈசாந்திமங்கலம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஈசாந்திமங்கலம் பகுதியின் மொத்த மக்கள்தொகை 3,302 ஆகும். இதில் 1,616 பேர் ஆண்கள்; 1,686 பேர் பெண்கள் ஆவர்.[1] சமயம்ஈசாந்திமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயில்[2] மற்றும் பிறைசூடி கண்டன்சாஸ்தா கோயில்[3] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன. அரசியல்ஈசாந்திமங்கலம் பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது. உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia